முகப்பு |
மயில் (மஞ்ஞை) |
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
262. பாலை |
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், |
||
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, |
||
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, |
||
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், |
||
5 |
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
|
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், |
||
குவளை நாறும் கூந்தல், தேமொழி |
||
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, |
||
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், |
||
10 |
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. | உரை |
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்
|
264. பாலை |
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, |
||
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, |
||
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் |
||
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் |
||
5 |
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
|
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே: |
||
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த |
||
ஆ பூண் தெண் மணி இயம்பும், |
||
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
|
276. குறிஞ்சி |
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு |
||
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு |
||
வயவர் மகளிர்' என்றிஆயின், |
||
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்; |
||
5 |
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் |
|
கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
||
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது |
||
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை |
||
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, |
||
10 |
வேங்கை முன்றில் குரவையும் கண்டே. | உரை |
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்
|
288. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
||
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
||
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
||
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
||
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
||
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
||
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
||
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் |
||
10 |
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? | உரை |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. | உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. | உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|
357. குறிஞ்சி |
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு |
||
என்னொடு நிலையாதுஆயினும், என்றும் |
||
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- |
||
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், |
||
5 |
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
|
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, |
||
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை |
||
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, |
||
நீர் அலைக் கலைஇய கண்ணிச் |
||
10 |
சாரல் நாடனொடு ஆடிய நாளே. | உரை |
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி
|