|
|
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
|
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
|
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
|
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
5 |
''துஞ்சாயோ, என் குறுமகள்?'' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
|
''படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
|
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
|
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
10 |
கண்ணும் படுமோ?'' என்றிசின், யானே. |
உரை |
|
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|
|
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
|
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
|
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
|
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-''முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
|
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
|
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
|
உலவை ஆகிய மரத்த |
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது'' எனவே? |
உரை |
|
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
|
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
|
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
|
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
|
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
|
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
|
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
|
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை |
|
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
|
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! |
|
அன்னவாக இனையல்-தோழி!-யாம் |
|
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? |
|
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் |
5 |
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
|
வறனுற்று ஆர முருக்கி, பையென |
|
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் |
|
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, |
|
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் |
10 |
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
|
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் |
|
காமம் படர் அட வருந்திய |
|
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! |
உரை |
|
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்
|
|
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
|
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
|
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
|
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
|
உருமிடைக் கடி இடி கரையும் |
|
பெரு மலை நாடனை ''வரூஉம்'' என்றோளே. |
உரை |
|
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|
|
மிளகு பெய்தனைய சுவைய புன் காய் |
|
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட |
|
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் |
|
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி, |
5 |
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், |
|
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், |
|
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ- |
|
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், |
|
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், |
10 |
மாண் நலம் கையறக் கலுழும் என் |
|
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? |
உரை |
|
மனை மருட்சி.-இனிசந்த நாகனார்
|
|
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
|
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
|
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
|
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
|
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
|
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
|
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
|
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? |
உரை |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
|
''விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, |
|
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் |
|
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்'' என- |
|
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி, |
5 |
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், |
|
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே; |
|
''செல்க'' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து, |
|
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள், |
|
கொடி நுடங்கு இலங்கின மின்னி, |
10 |
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்
|
|
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
|
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
|
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
|
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
|
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
|
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
|
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
|
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! |
உரை |
|
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
|
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
|
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
|
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
|
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
|
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
|
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
|
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! |
உரை |
|
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|
|