|
|
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
|
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
|
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
|
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
|
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
|
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
|
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
|
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, |
|
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, |
|
''நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; |
|
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்'' என்று, |
5 |
அன்னை கூறினள், புன்னையது நலனே- |
|
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; |
|
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, |
|
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் |
|
துறை கெழு கொண்க!-நீ நல்கின், |
10 |
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. |
உரை |
|
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
|
|
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
|
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
|
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
|
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, ''இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
|
அம் மலை கிழவோன் செய்தனன் இது'' எனின், |
|
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
|
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. |
உரை |
|
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|
|
''கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
|
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
|
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
|
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
|
உயங்கினை, மடந்தை!'' என்றி-தோழி!- |
|
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
|
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? |
உரை |
|
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|
|
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் |
|
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, |
|
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய |
|
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் |
5 |
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை |
|
தான் அறிந்தன்றோ இலளே; பானாள் |
|
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி, |
|
சுடுவான் போல நோக்கும், |
|
அடு பால் அன்ன என் பசலை மெய்யே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
|
|
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
|
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
|
சால்பின் அளித்தல் அறியாது, ''அவட்கு அவள் |
|
காதலள் என்னுமோ?'' உரைத்திசின்-தோழி!- |
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
|
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
|
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
|
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. |
உரை |
|
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
|
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, |
|
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு |
|
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; |
|
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட, |
5 |
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் |
|
பீலி சூட்டி மணி அணிபவ்வே; |
|
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே |
|
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து, |
|
எழுது எழில் உண்கண் பாவை |
10 |
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. |
உரை |
|
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
|
|
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
|
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
|
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
|
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
|
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
|
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
|
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
உரை |
|
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|
|
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
|
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
|
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
|
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
|
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
|
மை அணற் காளை பொய் புகலாக, |
|
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. |
உரை |
|
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
|
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
|
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
|
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
|
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
|
புன்னை விழுமம் போல, |
|
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. |
உரை |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
|