|
|
''மலை உறை குறவன் காதல் மட மகள், |
|
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
|
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
|
உள்ளல் கூடாது'' என்றோய்! மற்றும், |
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
|
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
|
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
|
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
|
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. |
உரை |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
|
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
|
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
|
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
|
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
|
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
|
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
|
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. |
உரை |
|
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
|
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு |
|
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் |
|
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை |
5 |
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
|
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் |
|
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை |
|
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, |
|
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் |
10 |
செய்த தன் தப்பல் அன்றியும், |
|
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்
|
|
''தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை |
|
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ? |
|
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய |
|
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ? |
5 |
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் |
|
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு'' என, |
|
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, |
|
தான் செய் குறி நிலை இனிய கூறி, |
|
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, |
10 |
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் |
|
கொடிச்சி செல்புறம் நோக்கி, |
|
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே? |
உரை |
|
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
|
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
|
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
|
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
|
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
|
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
|
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! |
உரை |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
|
''துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, |
|
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, |
|
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, |
|
செவ் வாய்ப் பாசினம் கவரும்'' என்று, அவ் வாய்த் |
5 |
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க'' என |
|
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், |
|
''நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி'' என |
|
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!- |
|
செல்வாள் என்றுகொல்? ''செறிப்பல்'' என்றுகொல்? |
10 |
கல் கெழு நாடன் கேண்மை |
|
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்
|
|
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
|
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
|
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
|
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
|
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
|
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. |
உரை |
|
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|
|
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, |
|
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, |
|
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, |
|
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!- |
5 |
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
|
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் |
|
கொன்னும் நம்புங் குரையர் தாமே; |
|
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; |
|
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் |
10 |
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
|
இன் துணைப் பிரிந்தோர் நாடித் |
|
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? |
உரை |
|
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்
|
|
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
|
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
|
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
|
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
|
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
|
தவிரும்காலைஆயின், என் |
|
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! |
உரை |
|
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|
|
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் |
|
மறு கால் உழுத ஈரச் செறுவின், |
|
வித்தொடு சென்ற வட்டி பற்பல |
|
மீனொடு பெயரும் யாணர் ஊர! |
5 |
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் |
|
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே; |
|
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் |
|
புன்கண் அஞ்சும் பண்பின் |
|
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. |
உரை |
|
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்
|
|