தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களுள் பாரத சக்தி மகா காவியத்திற்கு ஒரு சீரிய இடம் உண்டு. பாரத நாட்டு மக்களின் அற்புத சக்தி உலகை உய்விக்கும் உயர்சக்தியாக, ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயக் கூட்டம், ஒரே யோக விஞ்ஞானச் சமுதாயம் காண வேண்டும் என்னும் இலட்சியத்தை இது முன்னிலைப்படுத்துகிறது. இது புதுயுகத்தின் பூரண வேதம். இவ்வகையில் இக்காப்பியம் தனிச் சிறப்புடையதாக உள்ளது. காலவரையறையோ இடவரையறையோ இல்லாமல் பாரத மக்களின் ஆற்றலை, சிந்தனையை வெளிப்படுத்தும் பாங்கில் பண்டைக் காலச் சிந்தனை தொடங்கி அண்ணல் காந்தியடிகள் வரையுள்ள எல்லாமே இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வகையில் இக்காவியம் தனி இயல்புடையதாகத் திகழ்கிறது எனலாம். இக்காவியத்தின் மற்றொரு சிறப்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஓர் இலட்ச வெண்பொற்காசுகளை இராசராசன் விருதாகப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது எளிய நடையில் அமைந்துள்ளதால் இசைக் கருவிகளுடன் பாடிச் சுவைப்பதற்கு ஏற்றது.

    இத்தகைய சிறப்புகள் பொதிந்துள்ள பாரத சக்தி மகாகாவியம் குறித்த செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 12:41:58(இந்திய நேரம்)