தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A021321-வேற்றுமை உருபுகள்

  • 2.1 வேற்றுமை உருபுகள்

    முதலில், இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம். வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பப் பொருள் வேறுபடும், அது வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.

    எடுத்துக்காட்டு

    1)
    கண்ணன் கண்டான்
    2)
    கண்ணனை (க்) கண்டான்

    முதல் வாக்கியத்தில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான். முதல் வாக்கியத்தில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள். இந்த வேற்றுமையை உண்டாக்கியது என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம். இங்கு எடுத்துக்காட்டிய இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது.

    எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.

    வேற்றுமைகள்
    உருபு
    1)
    முதல் வேற்றுமை
    (எழுவாய் வேற்றுமை)
    -------
    2)
    இரண்டாம் வேற்றுமை
    3)
    மூன்றாம் வேற்றுமை
    ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
    4)
    நான்காம் வேற்றுமை
    கு
    5)
    ஐந்தாம் வேற்றுமை
    இன், இல்
    6)
    ஆறாம் வேற்றுமை
    அது, உடைய
    7)
    ஏழாம் வேற்றுமை
    கண்
    8)
    எட்டாம் வேற்றுமை
    (விளி வேற்றுமை)
    -------

    எடுத்துக்காட்டு

    2)
    கண்ணனைக் கண்டான்
    -
    -
    உருபு
    3)
    வாளால் வெட்டினான்
    -
    ஆல்
    -
    உருபு
    4)
    கூலிக்கு வேலை செய்தான்
    -
    கு
    -
    உருபு
    5)
    மலையின் வீழ் அருவி
    -
    இன்
    -
    உருபு
    6)
    கம்பரது கவித்திறம்
    -
    அது
    -
    உருபு
    7)
    அவையின் கண் இருந்தான்
    -
    கண்
    -
    உருபு

    இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டுவதைக் கண்டோம்.

    தமக்கென்று பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:20:00(இந்திய நேரம்)