தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான முனிவர் மடத்தின் ஆதரவில் வளர்ந்தவர். வடமொழியும் தமிழும் கற்றவர். சமய நூல்களும் இலக்கணவுரைகளும் படைத்தார். இவரைப் போன்றே இந்நூற்றாண்டில் தோன்றிய பெரியோர் இலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரை எழுதினர். புராணங்களை வடமொழியில் இருந்து மொழி பெயர்த்தனர். தங்கள் மதக் கருத்துக்களை இசுலாமியர் தமிழில் வெளியிட விரும்பியதால் இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், வசன உரைநடை நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், உரை நூல்கள் என்பன தோன்றின. அவ்வாறே கிறித்தவ சமய நூல்களும் வெளிவந்தன. மேனாட்டார் அகராதி, உரைநடை, மொழி பெயர்ப்பு, தொகுப்பு நூல் எனப் புதிய துறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினர். இவற்றைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:29:22(இந்திய நேரம்)