தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6:3-உடன்நிலை மெய்ம்மயக்கம்

  • 6.3 உடன்நிலை மெய்ம்மயக்கம்

    ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

    மெய் எழுத்துகள் பதினெட்டில் ர், ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

    உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள்:
    க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன்

    என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும்.

    க் என்னும் எழுத்து

    க்கள்
    க்காள்

    ங் என்னும் எழுத்து

    ங்ஙனம் (அவ்விதம்)
    ங்ஙனம் (எவ்விதம்)

    ச் என்னும் எழுத்து

    ச்சி
    ச்சு

    ஞ் என்னும் எழுத்து

    ஞ்ஞான்று (அப்பொழுது)
    ஞ்ஞான்று (எப்பொழுது)

    ட் என்னும் எழுத்து

    ட்டம்
    ட்டை

    ண்என்னும் எழுத்து

    ண்ணன்
    ண்ணீர்

    த்என்னும் எழுத்து

    த்தி
    த்து

    ந்என்னும் எழுத்து

    வெந்நீர்
    செந்நீர்

    ப்என்னும் எழுத்து

    ப்பல்
    குப்பை

    ம் என்னும் எழுத்து

    ம்மை
     அம்மாடு

    ய் என்னும் எழுத்து

    செய்யான்
    வெய்யோன் (கதிரவன்)

    ல் என்னும் எழுத்து

    ல்லாம்
    ல்லவன்

    வ் என்னும் எழுத்து

    செவ்வாய்
    கொவ்வை

    ள் என்னும் எழுத்து

    ள்ளம்
    ள்ளு

    ற் என்னும் எழுத்து

    குற்றம்
    காற்று

    ன் என்னும் எழுத்து

    ன்னன்
    பின்னால்

    மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது. ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது. க்+அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:25:59(இந்திய நேரம்)