Primary tabs
-
4)
பண்புப்பெயர்ப் பகுதிக்கு, நன்னூல் கூறும் சிறப்பு விதி யாது?
பண்புப் பெயர் பகுதிகளான ‘கருமை‘ செம்மை என்பவை கரு+மை; செம்+மை என்று மேலும் பிரிக்கத் தக்க வகையில் அமைந்து பகுபதங்கள் போல் தோன்றும். ஆனால் இயல்பில் ‘மை‘ என்னும் ‘விகுதிக்குப்‘ பகுதிப்பொருள் தவிர வேறுபொருள் அமையவில்லை. எனவே கருமை, செம்மை என்பவற்றையும் பகாப் பதங்களாகவே கொள்ள வேண்டும் என்று நன்னூலார் தெரிவிக்கின்றார்.