Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.வாழ்க்கையைச் சிந்தாமணி எப்படி வருணிக்கின்றது?
அறியாமை என்ற விதை வேதனை என்ற மரத்தை உண்டாக்கியது; ஆசைகள் என்ற வேர்கள் ஓடின. காதல், மகிழ்ச்சி என்ற கிளைகள் தோன்றின. துன்பப் பூப் பூத்தது; துயரக் காய் காய்த்தது. மரணம் என்ற பழத்தை அம்மரம் தந்தது. இவ்வாறு சிந்தாமணியால் மனித வாழ்க்கை வருணிக்கப் பெறுகின்றது.
