Primary tabs
- பாடம் - 5இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிகள், மக்களின் பொறுப்பு, பெண்கள் நிலை, கணவன் மறைவிற்குப்பின் பெண்கள் வாழ்வு போன்ற மக்கள் வாழ்க்கைச் செய்திகளைக் குறிப்பிடுகின்றது. வீரவழிபாடு, நடுகல், வரி விதித்தல், சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், குற்றம், வழக்கு, தண்டனை, அடிமைகள், மக்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றியும் சொல்லுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?பண்டைய மக்களின் தூயவாழ்வைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
சமுதாயத்தில் பெண்கள் பெற்றிருந்த நிலை எவ்வாறு இருந்தது என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
தவறு செய்தவர்களுக்கு எத்தகைய தண்டனையை வழங்கினர், எவ்வாறு வரி வசூலித்தனர் என்பனவற்றை அறியலாம்.
சமுதாயத்திலிருந்த வேறுபாடுகளையும், அடிமை முறையையும், நம்பிக்கையையும் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.