Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II4.விளக்கம் தருக.
- சென்றுழிக் கலங்கல்
தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்றபோது அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம் கலங்கிப் பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.
- வந்துழி நொந்துரை
ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து, திரும்பிவந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும், அவ்வாறே தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால் ஏற்பட்ட துன்பம் பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும் வந்துழி நொந்துரை எனப்படும்.
- வன்புறை
தலைவனது பிரிவு தேவையானது; அப்பிரிவை ஏற்றுப் பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று தோழி தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.
- வன்பொறை
தோழியின் வன்புறை அறிவுரைகளைக் கேட்ட தலைவி, தலைவனது பிரிவால் ஏற்பட்ட துயரத்தைப் பொறுத்துத் தாங்கிக் கொண்டு இருப்பாள். தலைவியின் மெல்லிய இயல்புக்கு மாறான அம் மனஉறுதி - ‘வன்பொறை’ எனப்படும்.