தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.

    கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.

    (1)
    செவிலி புலம்பல்
    :
    தலைவி காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித் தாய் புலம்புதல்.
    (2)
    நற்றாய் புலம்பல்  
    :
    தன் புதல்வி காதலனுடன் உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட நற்றாய் புலம்புதல்.
    3)
    கவர் மனை மருட்சி
    :
    நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல்.
    (4)

    கண்டோர் இரக்கம்

    :

    தலைவியின் தாயும் தோழியரும் அவளது உடன்போக்கினை அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை இரங்கிக் கூறுதல்.

    (5)
    செவிலி பின்தேடிச் சேறல்
    :
    உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:56:46(இந்திய நேரம்)