Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I4.
கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.
கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.
(1)செவிலி புலம்பல்:தலைவி காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித் தாய் புலம்புதல்.(2)நற்றாய் புலம்பல்:தன் புதல்வி காதலனுடன் உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட நற்றாய் புலம்புதல்.3)கவர் மனை மருட்சி:நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல்.(4)கண்டோர் இரக்கம்
:தலைவியின் தாயும் தோழியரும் அவளது உடன்போக்கினை அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை இரங்கிக் கூறுதல்.
(5)செவிலி பின்தேடிச் சேறல்:உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல்.