Primary tabs
பாடம் 4
P10144 கே. டானியலின் புதினங்கள்
தமிழ் ஈழ எழுத்தாளர் கே. டானியல். அவர் யாழ்ப்பாணச் சமூகத்திலே புரையோடியிருந்த சாதிச்சிக்கலை எவ்வாறு தீர்த்து வைக்கலாம் என்றொரு தேடல் முயற்சியினைத் தன்னுடைய ஒவ்வொரு நாவலிலும் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பாடம் கே. டானியலை அறிமுகம் செய்து அவர் எழுதிய கானல் என்ற புதினத்தின் வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப்பார்வை, பாத்திரப்படைப்பு நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
•பழந்தமிழ் ஈழ மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் டானியலின் நாவல் மூலம் அறியலாம்.•இலங்கைத் தமிழரின் சமூக அமைப்பு, தொழில், அரசியல், இனமோதல் என அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்வீர்கள்.•ஈழத்துத் தமிழர் சமுதாயத்தில் நிலவிய சமூகக் குறைபாடுகளைக் கண்டறிவீர்கள்.