Primary tabs
1.0 பாட முன்னுரை
இக்காலக் கவிதை என்பது என்ன? கவிதையின் விளக்கம், மரபுக்கவிதை, புதுக்கவிதை வேறுபாடு, மரபுக்கவிதையின் அமைப்பு, புதுக்கவிதையின் தோற்றம், பாடுபொருள், இருபதாம் நூற்றாண்டின் கவிதை எவ்வாறு வளர்ந்திருக்கிறது ஆகியவற்றை இப்பாடத்தில் விரிவாகக் காணலாம்.
தற்காலக் கவிஞர்களின் பங்களிப்பையும் அதனால் தமிழ் மொழியில் விளைந்துள்ள மொழிவளத்தையும் இப்பாடம் சொல்கிறது. இந்தியத் தேசியம், தமிழ்த் தேசியம் குறித்துக் கவிஞர்கள் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையை இப்பாடத்தில் மேலும் அறியலாம்.