இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
பாரதிதாசனின் தமிழ்ப்பற்று
எவ்வாறு கவிதையாக வெளிப்பட்டு இருக்கிறது என்பதை அறியலாம்.
நாமும் தமிழ்ப்பற்றை வளர்த்துக்
கொள்ளலாம்.
உழைப்பாளர்கள் மதிக்கப்பட
வேண்டும் என்ற சிந்தனையை, பாரதிதாசன் இளம் குழந்தைகளிடம் எடுத்துச்
சொல்வதை அறியலாம்.
நாட்டு விடுதலை வேட்கை,
மொழிப்பற்று முதலியவை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டும்
என்று வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.
கவிஞர் பல்வேறு
பொருள்கள் குறித்துச் சிந்தித்து, அவற்றைத் தம் கவிதைகளில்
சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளதை அறிந்து போற்றலாம்