தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அகம்- புறம் பாகுபாடு

  • 1.1 அகம் - புறம் பாகுபாடு

    பண்டைத் தமிழ் மக்கள், வாழ்க்கையை அகம் என்றும், புறம் என்றும் பகுத்தனர். உள்ளம் ஒத்த தலைவனும் தலைவியும் தாம் உற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துக்காட்ட முடியாது. இத்தகு காட்டலாகாப் பொருளான காதல் பற்றிய பாடல்களை அகம் என்பர். பிறருக்குப் புலப்படுத்தப்படும் கொடை, வீரம், கருணை முதலிய உணர்வுகள் பற்றிய பாடல்களைப் புறம் என்பர்.

    · அக நூல்கள்

    பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை ஆகியன அகநூல்கள். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியன அகநூல்கள்.

    · ஐந்திணை விளக்கம்

    திணை என்பதன் பொருள் ஒழுக்கம். அகத்திணைகள் ஏழு. அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்பன. நிலப் பாகுபாட்டையும், தலைவன்-தலைவி ஆகியோர் அக வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் ஒட்டித் திணைப் பாகுபாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் பாகுபாடு உண்டு. எந்தச் சூழலில் யார் பேசுவதாகப் (கூற்று) பாடல் பாடப்படுகிறது என்பதை விளக்கும் துறை என்ற பிரிவு திணைக்கு உண்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:25:50(இந்திய நேரம்)