தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 3.6 திருச்சிற்றம்பலக் கோவையார்-3.6 திருச்சிற்றம்பலக் கோவையார்

  • 3.6. திருச்சிற்றம்பலக் கோவையார்

    எட்டாந் திருமுறையுள் இடம் பெற்றுள்ள திருச்சிற்றம்பலக் கோவையார் 400 கட்டளைக்கலித்துறைப் பாக்களால் நடையிடுகிறது. அகப்பொருள் துறைகள் பலவற்றையும் அவை நிகழும் முறையில் நிரல்படக் கோத்துச் செய்யப்படும் அகப் பொருள் நூல் வகையைச் சார்ந்தது கோவை என்பது. திருச்சிற்றம்பலக் கோவையாரே இவ்வகையில் முதல் நூல் என்பர். தில்லைக் கூத்தப் பெருமானைப் பாடல் தோறும் இணைத்துப் பாடும் வகையில் புகழ்ந்துரைக்கும் போக்கில் இந்நூல் நடையிடுகிறது. தில்லைச் சிற்றம்பலவனின் அருளிப்பாடுகள் பலவும் மிக்க நயத்துடன் இந்நூலுள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சான்றாக.

     
    உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச்
       சிற்றம்பலத்து ஒருத்தன்
    (திருக்.9)
     
    பொருளாய் எனைப் புகுந்து ஆண்டு
        புரந்தரன் மால் அயன் பால்
    இருளாய் இருக்கும் ஒளி
    (திருக்-73)

    (புரந்தரன் = இந்திரன்)

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:56:43(இந்திய நேரம்)