Primary tabs
-
பாடம் - 1
P20221 - பழந்தமிழ் நூல்களில் திருமால் வழிபாடு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சங்க காலத்திற்கும் முற்பட்ட பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதையும் முல்லை நில மக்கள் திணைக் கடவுளாகத் திருமாலைக் கொண்டதையும் சான்றுகள் வழி விளக்குகிறது.
சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் திருமாலின் புகழ் குறிப்பிடப்பட்டிருப்பதும் திருமாலின் அவதாரங்கள் சில இடம்பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
அறநூல்களுள் திரிகடுகம் திருமாலின் திருவடிச் சிறப்பையும் அவதாரச் சிறப்பையும் விளக்குவதை எடுத்துரைக்கிறது.
காப்பியங்களுள் சிலப்பதிகாரத்தில் திருமாலின் கிடந்த கோலமும் நின்றகோலமும் விளக்கம் பெறுவதையும் குறிக்கிறது. மணிமேகலையில் திருமாலின் அவதாரம் பேசப்படுவதையும் குறிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
தொல்காப்பியம் முதல் மணிமேகலை வரை இடம் பெற்றுள்ள திருமால் பற்றிய குறிப்புகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.
-
இலக்கியப் பதிவின் வழி பெறும் திருமால் அவதாரங்கள் பற்றிய செய்திகளைப் பட்டியலிடலாம்.
-
சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமர் ஆகிய கடவுளரின் வழிபாடுகள் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றதை அடையாளங் காணலாம்.
-
தமிழர்களின் வழிபாட்டு முறைகளைத் தொகுத்துக் காணலாம்.
-
இராமகாதை பற்றிய கதைக்குறிப்பு, பாரதம் பற்றிய கதைக் குறிப்பு ஆகியவற்றைக் கதைவழி இனங்காணலாம்.
-
சிலப்பதிகாரம் ஐம்புலன்களோடு இறைவன் திருநாமத்தைத் தொடர்புபடுத்திக் காட்டியதன் வழி சமயத்தின் சிறப்பைக் கணித்து மகிழலாம்.
-