தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    மரபுக்கவிதையே ‘கவிதை’ எனத் தொன்று தொட்டு மதிக்கப் பெற்றுவருவதாகும். ஓசை ஒழுங்கும், வரையறுக்கப்பட்ட வடிவமும் இதன் இன்றியமையாத இயல்புகளாகும்.

    எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் அடிப்படை இலக்கணங்கள் மரபுக்கவிதை இயற்றத் தேவையானவையாகும். எனவே அவற்றை அறிந்தோம்.

    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியவற்றின் இலக்கணங்களும், வகைகளும், பாவினங்களாகிய தாழிசை, துறை, விருத்தங்களும் குறித்த அறிவும் புலமையும் பாப்புனைவோர்க்கு இன்றியமையாதனவாதலின் அவை எடுத்துரைக்கப்பட்டன. பாவகைகள் நெருங்கிய தொடர்புடையவை. பாவினங்கள் பாவுடன் நெருங்கிய தொடர்புடையனவல்ல. பாவினங்களில் வாய்பாட்டமைப்புக்கே முக்கியத்துவம் தரப்பெறும். தளைகள் குறித்த சிந்தனை தேவைப்படாது.

    பா இயற்ற விரும்புவோர் பொருள்கோள், செய்யுள் விகாரம், நடை நலன், புணர்ச்சி விதிகள் ஆகியன குறித்தும் அறிந்திருத்தல் வேண்டுமாதலின் அவை ஓரளவு சுட்டிக்காட்டப்பட்டன.

    இவ்வகையில் மரபுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடம், பாக்களை அடையாளம் காணவும், புதியனவற்றை இவ்வடிவங்களில் புனையவும் ஆர்வத்தையும் பயிற்சியையும் அளிப்பதாக அமைகின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1)

    நால்வகைப் பாக்களுக்குரிய பாவினங்கள் யாவை?

    2)

    கட்டளைக் கலித்துறை யாப்பின் இலக்கணம் யாது? அந்த யாப்பில் அமைந்த இரு நூல்களைக் குறிப்பிடுக.

    3)

    ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் கூறுக.

    4)

    கலிவிருத்தம் பற்றிக் கூறுக.

    5)

    செய்யுள் விகாரங்கள் ஏன் தோன்றுகின்றன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-09-2017 17:00:06(இந்திய நேரம்)