Primary tabs
வெறுப்பு, சோகம், அச்சம், அருவருப்பு என்பன. நாணுதல்-இங்கு, அடங்குதல். எதிர்கோடலென்பது, நவபுண்யக்ரமத்தில் முதலது. நவபுண்ய க்ரமங்களாவன;-முனிவர் உணவு உண்ணற்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ளல், உச்சஸ்தானத்தி லமர்வித்தல், பாதங்கழுவுதல், பாதபூசை செய்தல், வணங்குதல், மனச்சுத்தியுடைமை, வாசனசுத்தியுடைமை, காயசுத்தியுடைமை, ஆகாரசுத்தியுடைமையென்பனவாம்.
இதனை,
என்று (சீவக.2827,8.) சிந்தாமணியாசிரியர் கூறுவதனால் அறியலாகும்.
என்று (சீவக.2828-ன் உரையில்) நச்சினார்க்கினியர் கூறுவதும் ஈண்டு அறியத்தகும். தூய உணவாவன:-தேன், புலால், கள் முதலிய குற்றம் நீங்கியவைகளாம். இதனை ‘ஊனொடுதேனுங் கள்ளு மின்றிநன் றாய வுண்டி, தானுவந்து ,,,,,,,,,,ஈதல் தானமாம்‘ (மேரு.349.) என்ற வாமனமுனிவர் கூற்றா லுணரலாகும். இத்தூயவுணவினை வடநூலார் ஏஷணாதோஷம் முதலிய நாற்பத்திரண்டு குற்றங்களின் நீங்கிய பவித்திரவுணவு என்பர். விரிவு, ஸ்ரீபுராணத்துட் காண்க.