Primary tabs
உறுதி மொழி, என்னை - ஏன் ? என்றாள் - என்று அபயமதி கூறினாள். (எ-று.)
அண்ணலே, இவ்வுடலும் உடலைச் சார்ந்த பொருளும் நமது என்று எண்ணுமவர்க்கே நீர் கூறிய அறவுரை பொருத்தமாகும்; பற்றறரத் துறந்த நமக்கு வேண்டாஎன்றன ளென்க.
‘ஆகும்‘ என்று ஒரு சொல் வருவிக்க. அருளிற்று-அருளிச் செய்தது. மெய்-உடல். இவ்வுடல், [மூளை
விடு மியல்பினதாத லானும்,
‘அருவருப் புடைய மெய’ என்றார். உறுதி - உறுதிப் பொருள்; வீடு பேற்றிற்குரிய அறப்பொருள். விண் - தேவருலகம். தேவசுகமும் பிறவிக்கு ஏது வாகலின், ‘விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன்‘ என்றார். இங்ஙனே, ‘விண்ணின்மே லின்பமே விழைந்த வேட்கையான்‘ 2என்று சிந்தாமணியாரும் கூறினார், ‘வானோர்க்குயர்ந்த வுலகம் புகும’ 3 என்று தேவர்கூறியதும் இக்கருத்தே யென்ப. முன்னரே பற்றற்றுத் துறவு பூண்டவராதலால், ‘வெறுத்து நின்ற’ என்று இறந்தகாலத்தாற்கூறினார். விழைவு - ஆசைப்பெருக்கம். கட்டுரை - உறுதி மொழி. என் - என்று எண்ணுகின்ற. என்னை, யாது பயன். அருளிற்றெல்லாம் என்றது, யசோ. 32 முதல் 44 - வரை கூறியதனை. இனி, ‘விண்ணின்மே லின்பமல்லால் விழைபயன் வெறுத்து நின்ற‘ என்ற தொடர், ‘நங்கட்கு‘ என்பதனோடு இயையாமல், அபயரு
* மேரு 857.
1 திருமங்கலம்-72.
2 சீவக.2742.
3 குறள் 346.