தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 67 -

உறுதி மொழி, என்னை - ஏன் ? என்றாள் - என்று அபயமதி கூறினாள்.   (எ-று.)

அண்ணலே, இவ்வுடலும் உடலைச் சார்ந்த பொருளும் நமது என்று எண்ணுமவர்க்கே நீர் கூறிய அறவுரை பொருத்தமாகும்; பற்றறரத் துறந்த நமக்கு வேண்டாஎன்றன ளென்க.

‘ஆகும்‘ என்று ஒரு சொல் வருவிக்க.  அருளிற்று-அருளிச் செய்தது.  மெய்-உடல்.  இவ்வுடல், [மூளை

“எலும்புதோல் ஈருள் வெண்ணஞ்சூன் குடலர்மலங்கண்
கலந்தநெய்த்தோர் நரம்பு வழுப்பிவை வேறுகண்டால்
விலங்கிமேற் சேரலின்றி வெறுத்துமிழ்ந் துவர்த்து”*

விடு மியல்பினதாத லானும்,

“துன்னும், புழுப்பிண்டமாகிப் புறஞ்செய்யுந் தூய்மை
விழுப்பொருளை வீறழிப்பதாகி - அழுக்கொழுகு
மொன்பது வாயிற்றா மூன்குரம்பை”  1 ஆதலானும்

‘அருவருப் புடைய மெய’ என்றார். உறுதி - உறுதிப் பொருள்;  வீடு பேற்றிற்குரிய அறப்பொருள். விண் - தேவருலகம்.  தேவசுகமும் பிறவிக்கு ஏது வாகலின், ‘விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன்‘  என்றார்.  இங்ஙனே, ‘விண்ணின்மே லின்பமே விழைந்த வேட்கையான்‘ 2என்று சிந்தாமணியாரும் கூறினார், ‘வானோர்க்குயர்ந்த வுலகம் புகும’ 3 என்று தேவர்கூறியதும் இக்கருத்தே யென்ப.  முன்னரே பற்றற்றுத் துறவு பூண்டவராதலால், ‘வெறுத்து நின்ற’ என்று இறந்தகாலத்தாற்கூறினார். விழைவு - ஆசைப்பெருக்கம்.  கட்டுரை - உறுதி மொழி. என் - என்று எண்ணுகின்ற.  என்னை, யாது பயன்.  அருளிற்றெல்லாம் என்றது, யசோ. 32 முதல் 44 -   வரை கூறியதனை.  இனி, ‘விண்ணின்மே லின்பமல்லால் விழைபயன் வெறுத்து நின்ற‘ என்ற தொடர், ‘நங்கட்கு‘ என்பதனோடு இயையாமல், அபயரு

* மேரு 857.

1 திருமங்கலம்-72.

2 சீவக.2742.

3 குறள் 346.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:55:13(இந்திய நேரம்)