தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 68 -

சியைக் குறிக்குங் கண்ணனாய் என்பதனோடு இயையும் எனினுமாம்.  அருளிற்றெல்லாம், என்பது ஒருமை பன்மை மயக்கம்; இனி அருளியது - முழுவதும் எனலுமாம். ‘நண்ணிய‘ என்பது நண்ணியது என்பதன் விகாரம். ‘கருமுகில்... ... வருவபோற் கலுழன் மேல் வந்து‘ (கம்ப.  திருவவ.) என்பது காண்க.                                                           (41)

இதுவுமது.

46.
அருவினை விளையு ளாய1 அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்
திருவுடை2 யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்

(இ-ள்.) அருவினை விளையுள் ஆய - தீவினைகளின் உதயத்தாலாய, அருந்துயர் பிறவி தோறும் - தாங்கற்கரிய துயருறும் ஒவ்வொரு பிறவியிலும், வெருவிய  மனத்து நம்மை - நடுங்கிய மன முடைய நம்மை, வீடு இலவிளைந்த வாறும் - (அவ்வினைகள்) விடுதலன்றி (த்தொடர்ந்து) பல இன்னல் விளைவித்த வாற்றையும், திருவுடைஅடிகள் தந்த - புண்ணிய மூர்த்தியான சுதத்தாசார்யர் (அருளுடன்) தெரிவித்த, திருவறப்பயனும்-திருவறத்தினாலாகும் நன்மையினையும், தேறி - தெளியவுணர்ந்து, நாம்--, வெருவி - (பிறவியின் சுழற்சிக்கு) அஞ்சி, விடுத்தவாழ்க்கை - பற்றின்றி விடுத்த (நம்) வாழ்க்கையினை, விடுவதற்கு அஞ்சல் உண்டோ - விட்டு நீக்குவதற்கு அஞ்சவேண்டயதுண்டோ? (இல்லையென்றபடி) (எ-று.)

வினைப்பயனும் அறப்பயனும் தெளிந்தநாம் மரணத்திற்கு அஞ்சுவதுண்டோ? இல்லை என்றன ளென்க

பிறவிதோறும் விளைந்தவாறும் பயனும் தேறிவெருவி விடுத்த வாழ்க்கை என இயைக்க.  பொறிவாயிலால் ஈட்டிய தீவினைகள் அவ்வுயிருடன் சேர்ந்து பந்த

1 பாடம். வினையுளாய,

2 திருவிடை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:55:22(இந்திய நேரம்)