Primary tabs
திற்கு வருவதாகும். இதனையே, ‘அருவினை விளையுளாய அருந்துயர்ப் பிறவிதோறும்‘ என்றார். பிறவிதோறும் - ஒவ்வொரு பிறவியிலும். மாமுனிவர்க் கன்றி மற்றை யோருக்கு அவ்வினைகள் பயனை அளித்தே ஏகுவதனால்’வீடு இல விளைந்த வாறும்‘ என்றாள். விளைதல் - உண்டாதல். வீடு இல - விடுதல் இல்லாதனவாய். திருவுடைஅடிகள், சதத்தாசார்யர். திரு - ஈண்டு ஞானச் செல்வம்; அவதி ஞானம் அடைந்தவராதலின், (யசோ. 274)
அவரை இவ்வாறு கூறினார். அடிகள் - முனிவர். ‘திருவுடையடிகள்‘ என்பதற்கு இறைவன் எனினுமாம். ஜீவகாருண்யத்தை மூலமாகக் கொண்ட அறமாதலின்‘திருவறம்‘ என்றார்.
பயன் - வீடுபேறு. வெருவுதல் - அஞ்சுதல். அடி, 2-ல் வெருவுதல், துன்பத்திற்கு அஞ்சுதல். அடி, 4-ல் வெருவுதல், துறவெண்ணத்தால் வினைகளுக்கு அஞ்சுதல். ‘வினைவசமாய விந்த வீறிலா வாழ்க்கை தன்னை, நினைதொறும் உள்ளம் நின்று நடுங்கிடும்‘ (மேரு - 800) என்பது காண்க.
‘அதுநமதன்றென் றன்றோ மனத்தினில் விடுத்தது ? என்று (யசோ 32ல்.) அபயருசி கூறியதற் கேற்ப, வெருவி நாம் விடுத்த வாழ்க்கை‘ என்று அபயமதி கூறியதுஅவள் உள்ளத்தின் மாட்சியினை வெளிப்படுத்துகின்றது.
நம் பிறவிக்குக் காரணம் ஞானவரணீயம் முதலிய எட்டுவினைகளே; அவற்றுள் நாம, கோத்திர கர்மங்களினால் உடல் அடைவதும், வேதனீயகர்மத்தால் பயன் அடைவதும், ஆயுஷ்யகர்மத்தின் முடிவினால் மரண மெய்துவதும் அமைகின்றன; இத்தன்மையை,
என்று (மேரு. 462-ல்) கூறியதனா லறிக. (42)