Primary tabs
இதுவுமது
(இ-ள்.) ‘பெண் உயி்ர் - பெண்களாகப் பிறந்தவர்கள், எளியது ஆம்-மென்மையுடையவர்; (அன்றியும்), சிந்தையில் பெருந்திறல் அறிவும் போரத்திண்மையும் உடையவல்ல-மனத்தில் மிக்கவன்மையான அறிவும் கலங்காத திண்மையும் உடையவர் அல்லர்‘, என்பது எண்ணி-என்பதைக்கருதி, அண்ணல் நீ-சிறந்தவராகிய தாம், அருளிச் செய்தாய் - அருளிச் செய்தீர், அன்றி - அல்லாமல், நல்அறத்திற் காட்சி கண்ணிய மனத்தர் - திருவறத்திற் கூறியநற்காட்சியை மேன்மையெனக் கருதி ஒழுகுபவர், இம்மைக் காதலும் உடையரோ-இப்பிறவியி்ல் காதல் உடைவர் ஆகுவரோ? (ஆகார்). (எ-று.)
பெண்ணுயிரின் தன்மையைக் கருதி இவ்வாறு கூறினீர்; நற்காட்சி யுடையார் பற்று அடையார் ஆதலின், காட்சியுடைய எனக்கும் யாதொரு பற்றும் இல்லைஎன்றாளென்க.
திண்மை-உறுதி. உயிருக்கு மென்மையும் வன்மையும் இல்லையாயினும் எடுத்த உடலுக்கு உள்ள குணங்களை உயிருக்கு ஏற்றிக் கூறினாள். உயிர் என்றதனால் எளியது என்றார். பெண்கள் மென்மையுடையராதலின் அவர்களை மெல்லியலார் என்று கூறுப. இனி எளியது என்பதற்குப் பிறப்பால் தாழ்வுடையர் எனினுமாம்; என்னை யெனின், கருத்தங்கிய காலம் முதலியவற்றில் துன்புறும் உடலாதலாலும், முற்பிறவியில் நற்காட்சியுடையார் பெண்களாகப் பிறவா ராதலாலுமென்க. *செறியச் சொன்ன பொருள் தெளிந்தார் சேரார்
* சீவக. 2817.