தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 71 -

இதுவுமது

47.
பெண்ணுயி ரெளிய தாமே பெருந்திற லறிவும் பேராத்
 
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
 
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி
 
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.

(இ-ள்.) ‘பெண் உயி்ர் - பெண்களாகப்  பிறந்தவர்கள், எளியது ஆம்-மென்மையுடையவர்;  (அன்றியும்), சிந்தையில் பெருந்திறல் அறிவும்  போரத்திண்மையும் உடையவல்ல-மனத்தில் மிக்கவன்மையான அறிவும் கலங்காத திண்மையும் உடையவர் அல்லர்‘, என்பது எண்ணி-என்பதைக்கருதி, அண்ணல் நீ-சிறந்தவராகிய தாம், அருளிச் செய்தாய் - அருளிச் செய்தீர்,  அன்றி - அல்லாமல், நல்அறத்திற் காட்சி கண்ணிய மனத்தர் - திருவறத்திற் கூறியநற்காட்சியை மேன்மையெனக் கருதி ஒழுகுபவர்,  இம்மைக் காதலும் உடையரோ-இப்பிறவியி்ல் காதல் உடைவர் ஆகுவரோ? (ஆகார்).  (எ-று.)

பெண்ணுயிரின் தன்மையைக் கருதி இவ்வாறு கூறினீர்; நற்காட்சி யுடையார் பற்று அடையார்  ஆதலின், காட்சியுடைய எனக்கும் யாதொரு பற்றும் இல்லைஎன்றாளென்க.

திண்மை-உறுதி.  உயிருக்கு மென்மையும் வன்மையும் இல்லையாயினும் எடுத்த உடலுக்கு உள்ள குணங்களை உயிருக்கு ஏற்றிக்  கூறினாள். உயிர் என்றதனால் எளியது என்றார். பெண்கள் மென்மையுடையராதலின் அவர்களை மெல்லியலார்  என்று கூறுப. இனி எளியது என்பதற்குப் பிறப்பால்  தாழ்வுடையர் எனினுமாம்; என்னை யெனின், கருத்தங்கிய  காலம் முதலியவற்றில் துன்புறும் உடலாதலாலும், முற்பிறவியில் நற்காட்சியுடையார் பெண்களாகப் பிறவா  ராதலாலுமென்க. *செறியச் சொன்ன பொருள் தெளிந்தார்  சேரார்

 

* சீவக. 2817.

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:55:52(இந்திய நேரம்)