தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 90 -

இங்கு முதலில் கூறிய ஐவகை ஒழுக்கமென்பது முனிவர்களின் ஒழுக்கமாதலாலும், சாரித்ராசாரத்தின் உட்பிரிவிலேயே கொல்லாமை முதலிய  ஐந்து மஹாவிரதம் பொருந்தி யிருப்பதனாலும், ‘ஐவகை ஒழுக்கம்‘ என்பதற்குக் கொல்லாமை முதலிய ஐந்து எனப் பொருள் கொள்வது பொருந்தா வென்றுணர்க.

மெய்வகை - மெய்ப்பொருளின் வகை.  அவை - ஆப்தன், ஆகமம், பதார்த்தம்,  பிரமாணம்,  பிரவ்ருத்தி,  லிங்கம், சாரித்ரம்,  பலம்  என எட்டு வகைப்படும், இவற்றின் விரிவினை அஷ்டபதார்த்த சாரம் என்னும் நூலிற்  கண்டுகொள்க.

பவ்வியர்;- நற்காட்சி பெற்றுக் கிராமத்தில் முக்தியெய்தும் பக்குவம் உடையவர்;  அபவ்யர் எக்காலத்தும் நற்காட்சி  பெறாது பிறவியிலேயே  கட்டுண்டுகிடப்பவர். பாரித்தல் - உண்டாக்கல்; தம்மைப்போல் நல்விழியில் ஒழுகச் செய்தல்.  அவ்வியம்-மனக்கோட்டம்.  கோட்டம்-கோணல்.  ‘அவ்வியமகன்று‘ என்னும் (சீவக. 394.)  செய்யுளுரை காண்க.  தொல் - பழமை.  இறைவனருளிய பழமையான அறத்தை மேற்கொண்டதால் தொல்லா சிரியரெனப்பட்டனர்.  இதனை,

 
‘தொன்மாண்பமைந்த புனை  நல்லறம் துன்னி நின்ற
 
சொன்மாண் பமைந்த குழு.‘

என்று  (சீவக. 3-ல்) கூறியத  னாலறியலாகும்.                     (50)

உபாத்தியாயர் வணக்கம்

55.
அ ங்க நூலாதி யாவு மரிறபத்1 தெரிந்து தீமைப்
 
பங்கவிழ்2 பங்க மாடிப்3 பரமநன்4 னெறிப யின்றிட்
 
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த
 
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.

1 பாடம் அறிப்பறத்.

2 பங்கம் வீழ். பங்கமேழ்.

3 பங்கம் பாடி.

4 பரமனன்னெறி.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:58:57(இந்திய நேரம்)