Primary tabs
இங்கு முதலில் கூறிய ஐவகை ஒழுக்கமென்பது முனிவர்களின் ஒழுக்கமாதலாலும், சாரித்ராசாரத்தின் உட்பிரிவிலேயே கொல்லாமை முதலிய ஐந்து மஹாவிரதம் பொருந்தி யிருப்பதனாலும், ‘ஐவகை ஒழுக்கம்‘ என்பதற்குக் கொல்லாமை முதலிய ஐந்து எனப் பொருள் கொள்வது பொருந்தா வென்றுணர்க.
மெய்வகை - மெய்ப்பொருளின் வகை. அவை - ஆப்தன், ஆகமம், பதார்த்தம், பிரமாணம், பிரவ்ருத்தி, லிங்கம், சாரித்ரம், பலம் என எட்டு வகைப்படும், இவற்றின் விரிவினை அஷ்டபதார்த்த சாரம் என்னும் நூலிற் கண்டுகொள்க.
பவ்வியர்;- நற்காட்சி பெற்றுக் கிராமத்தில் முக்தியெய்தும் பக்குவம் உடையவர்; அபவ்யர் எக்காலத்தும் நற்காட்சி பெறாது பிறவியிலேயே கட்டுண்டுகிடப்பவர். பாரித்தல் - உண்டாக்கல்; தம்மைப்போல் நல்விழியில் ஒழுகச் செய்தல். அவ்வியம்-மனக்கோட்டம். கோட்டம்-கோணல். ‘அவ்வியமகன்று‘ என்னும் (சீவக. 394.) செய்யுளுரை காண்க. தொல் - பழமை. இறைவனருளிய பழமையான அறத்தை மேற்கொண்டதால் தொல்லா சிரியரெனப்பட்டனர். இதனை,
என்று (சீவக. 3-ல்) கூறியத னாலறியலாகும். (50)
உபாத்தியாயர் வணக்கம்
1 பாடம் அறிப்பறத்.
2 பங்கம் வீழ். பங்கமேழ்.
3 பங்கம் பாடி.
4 பரமனன்னெறி.