தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 97 -

(இ-ள்.) பேது உறு பிறவி போக்கும் - (வினைகளால்) மயங்கி உழலும் பிறவியை அழிக்கும், பெருந்திரு உருவுக்கு ஏற்ற-சிறந்த  திருவடிவத்திற்கு  ஏற்புடையனவாகிய,  கோது அறு  குணங்கள் பெய்த கொள்கலம் - குற்றமற்ற குணங்கள் பெய்யப் பெற்று நிரம்பிய நன்கலத்தை, அனையராகி - ஒப்பவராகி,சேதியின்  நெறியின் வேறு - மோக்ஷமார்க்கத்தினைத்தவிர  (மோக்ஷத்தினை) எய்துதற்குக் காரணமான சுத்தோபயோகத்தைத் தவிர)வேறே, சிறந்தது சிந்தை செய்யா-சிறந்ததாகிய சுபோபயோகத்தையும் சிந்திக்காத,  சாதுவர்  அன்றி-சர்வசாதுபரமேஷ்டிகளேயல்லது,  உலகில் - இவ்வுலகில்,  நமக்குசரண் ஆவார்  யார் --,  (எவரும் இல்லை). (எ-று.)

பிறவியை  நீக்கும் உருவமும்,  அவ்வுருவுக் கேற்ற குணங்களும், குணங்களுக் கேற்ற செயலும் உடைய  சர்வ சாதுக்களே நமக்கு சரண்  என்று துதித்தன ரென்க.

பிறவிபோக்குங் குணங்கள்,  திருஉருவுக் கேற்ற குணங்கள்  என்க.  பேது--அறிவை மயக்குவது.  பெருந்திரு உருவம் - முக்தி எய்துதற்குக் காரணமான  உருவம்; திகம்பரஉருவம்.  கோது - குற்றம்; ஆசை, கோபம், மயக்கம் என்ற முக்குற்றங்கள்.  குணங்கள் - நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற  மூன்று குணங்கள்.  கொள்கலம் - பாத்திரம்.  இங்கு, குணங்கள் நிரம்பிய  பாத்திரம்.

சேதியின்  நெறி - முக்தி நெறி.  சேதி - மோக்ஷம். சேதி - மோக்ஷம் என்பதனை,

 "
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
 
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
 
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய
 
சேதியஞ் செல்வரின் றிருந்தடி வணங்கினம்”

(சூளா.  இரத. 96.)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:00:06(இந்திய நேரம்)