Primary tabs
கடலைக்கடப்பதற்குக் காரணமானது தெப்பம்; இவ்விடத்து அமிர்தமதியாகிய தெப்பம் காமக் கடலைக் கடப்பதற்கு உரியதாகின்றது. மடம் - பெண்கள் நாற்குணத்தொன்றெனினுமாம். நல்லாள் - நலனுடையாள். ‘இடங்கழிந்து‘ -வரம்புநீக்கி, எல்லையின்றி; ‘ இடங்கழிகாமமொடடங்கா னாகி‘ என்பது ‘மணிமேகலை‘ 18-11-9ல் கூறுதல் காண்க. பஞ்சேந்திரிய விஷயங்களை அனுபவித்துக் கழித்து எனினும் அமையும். (19)
இருவரும்
இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.
(இ-ள்.) இன் அரி சிலம்பும் - இனிய ஒசையைத்தருகின்ற பரல்நிறைந்த சிலம்பும், தேனும் - (மாலைகளில்மொய்த்துள்ள) வண்டுக் கூட்டமும், எழில்வளை நிரையும் - அழகிய வளையல் வரிசையும், ஆர்ப்ப - ஒலிக்கும் படியாக பொன் அவிர் தாரோடு - பொன்னா லியற்றப்பட்டு ஒளிரு கின்ற - மாலையோடு, ஆரம் - இரத்தினாஹாரமும், புணர்முலை பொருது பொங்க - (அமிர்தமதியின்) இரண்டு தனங்களிலும் அழுந்தி எழும்படியாக, மன்னன் உம்மடத்தை தான் உம் - அரசனும் அரசியும். (ஆகிய இருவரும்), மதன கோபத்தின் மாறுஆய் - மன்மதனின் கோபத்திற்கு மாறுபட்டு, தொல்நலம் தொலைய - கலவிக்கு முன்பு இருந்த (தங்கள்) அழகு கெட, உண்டார் - இன்புற்றனர், விழிகள் அன்றே துயில் கொண்ட - அவர்தம் விழிகளும் அப்போழுதே துயின்றன. (எ-று.)
சிலம்பு முதலியன ஆர்ப்ப ஆரமும் மாலையும் பொங்ககாமச் சுவையை உண்டு, அரசனும் அரசியும் துயின்றன ரென்க. தொல்நலந்தொலைந்தது காமன் கோபம் மாறுபடுதற்குச் காரணமாகும். (20)