Primary tabs
மன்னன், ‘ஏகலுற்ற இவளுயிர் அரிதினில் மீண்டது‘என்று அசதி யாடி அவளைப் பிரிந்து பெருமூச் செறிந்து தனித்திருந்தானென்க.
புரைபரை தோறும்-மலரிதழ்களின் ஒவ்வோரடுக்குக்களிலுமுள்ள தொளைதோறும் என்க. ஏகலுற்றது என்பதனை இவளுயிர் என்பதனோடுகொண்டு கூட்டி, ஏகலுற்றதாகிய இவளுயிர் என்றும் கூறலாம். வெய்துயிர்த்தனன், முற்றெச்சம். (53)
மன்னன், தாயிடம் சேறல்
(இ-ள்.) ஆயிடை - அச்சமயத்தில், அரசன் (வெய்துயிர்த்திருந்த) அரசன், உள்ளத்து -(தன்) மனத்தில், அரசினை - தன் அரசாட்சியை, விடுப்ப - விட்டுத்துறக்க, எண்ணி - கருதியவனாய், தாய அமர் கோயில் - தாய் தங்கியிருந்த அரண்மனையை, எய்தி - அடைந்து, சந்திரமதிதன்முன்னர் -சந்திரமதி என்னும் பெயருடைய அவளுக்கு எதிரில், சேய்இடை இறைஞ்ச -சேய்மைக்கண்ணே நின்று வணங்க, திரைசெய்நீர்உலகம் எல்லாம் - அலையினுடையகடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதும், உயர் குடையின் வைகி-சிறந்த வெண்கொற்றக் குடையின் நீழலில் தங்கியிருக்க, நீ -, நெடிது உடன்வாழ்க என்றாள் - நீண்ட காலம்நின் அரசியலோடு வாழ்க என்று ஆசி கூறினாள். (எ-று.)
அரசன், அரசைத் துறக்க எண்ணித் தாயிடம்சென்று வணங்க. அவள் வாழ்த்தினா ளென்க.
வைகி என்பது எச்சத் திரிபு. பெரியாரிடைச் செல்வோர் சேய்மையில்நின்று வணங்குதல் மரபு. இதனை, ‘ஐவிலி னகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு‘(சீவக. 1704) என்ற திருத்தக்கதேவர்வாக்கானு மறிக