தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 172 -

மன்னன், ‘ஏகலுற்ற இவளுயிர் அரிதினில் மீண்டது‘என்று அசதி யாடி அவளைப் பிரிந்து பெருமூச் செறிந்து தனித்திருந்தானென்க.

புரைபரை தோறும்-மலரிதழ்களின் ஒவ்வோரடுக்குக்களிலுமுள்ள தொளைதோறும் என்க.   ஏகலுற்றது என்பதனை இவளுயிர் என்பதனோடுகொண்டு கூட்டி, ஏகலுற்றதாகிய இவளுயிர் என்றும் கூறலாம்.  வெய்துயிர்த்தனன், முற்றெச்சம்.         (53)                 

மன்னன், தாயிடம் சேறல்

 "
ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணித்
 
தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச்
 
சேயிடை யிறைஞ்ச மற்றித் திரைசெய்நீ ருலக மெல்லாம
 
நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள்."

    (இ-ள்.)  ஆயிடை - அச்சமயத்தில், அரசன் (வெய்துயிர்த்திருந்த) அரசன், உள்ளத்து -(தன்)  மனத்தில், அரசினை - தன் அரசாட்சியை, விடுப்ப - விட்டுத்துறக்க, எண்ணி - கருதியவனாய், தாய அமர் கோயில் - தாய் தங்கியிருந்த அரண்மனையை, எய்தி - அடைந்து, சந்திரமதிதன்முன்னர் -சந்திரமதி என்னும் பெயருடைய அவளுக்கு எதிரில், சேய்இடை இறைஞ்ச -சேய்மைக்கண்ணே நின்று வணங்க, திரைசெய்நீர்உலகம் எல்லாம் - அலையினுடையகடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதும், உயர் குடையின் வைகி-சிறந்த வெண்கொற்றக் குடையின் நீழலில் தங்கியிருக்க, நீ -, நெடிது உடன்வாழ்க என்றாள் - நீண்ட காலம்நின் அரசியலோடு வாழ்க என்று ஆசி கூறினாள். (எ-று.)

அரசன், அரசைத் துறக்க எண்ணித் தாயிடம்சென்று வணங்க.  அவள் வாழ்த்தினா ளென்க.

வைகி என்பது எச்சத் திரிபு. பெரியாரிடைச் செல்வோர் சேய்மையில்நின்று வணங்குதல் மரபு.  இதனை, ‘ஐவிலி னகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு‘(சீவக. 1704) என்ற திருத்தக்கதேவர்வாக்கானு மறிக



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:12:22(இந்திய நேரம்)