Primary tabs
காட்சியுடையான், இறைவனென வுணரற் பாற்று‘ என்றுஅருங்கலச் செப்பில் கூறியது ஈண்டு அறிதற்பாலது. விரதம் மேற்கொள்வார் செற்றம் முதலியன நீக்குதல்முறை ஆதலின், ‘செற்றமும் சினமும் நீக்கி‘ என்றார். ஆசை முதலிய குற்றங்களும் இங்கு அடங்கும். செற்றம் -வைரங்கொண்டுள்ள பகைமை: சினம் - புதிதாக ஏற்படும் கோபம். முன்னம் பகர்ந்தன என்றது 235, 236 ஆங்கவிகளில் கூறியவற்றை. விரதம் முதலியன ஆசார்யரிடமே கைக்கொள்ளுதலியல்பு. பெரும்பயன் - வீடுபேறு. (27)
(இ-ள்) அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்தம்மை - அகம்பன முனிவரரின் அருள்நிறைந்த அறவுரைகளை, கூட்டினுள் இருந்த -(சண்டகருமனுடைய) கூட்டில்தங்கியிருந்த, அக்கோழிகள் கேட்டலும் - (முன் யசோதரனும் தாயுமாயிருந்த) அந்தக் கோழிகள் கேட்டபொழுதே,பிறப்பு உணர்ந்திட்டு - (தமக்கு ஏற்பட்ட பழம் பிறப்பு அறிதற்கு ஏற்ற உணர்வினால்) தங்கள் முற்பிறவிகளை யுணர்ந்து, ஒட்டிய சினத்த ஆகி - (அமிர்தமதியிடமிருந்த) கோபத்தைவிட்டனவாகி, உறு வதம் - (தமக்குப்) பொருந்திய (அணு)விரதத்தினை, உய்ந்துகொண்ட - (தாங்கள்) உஜ்ஜீவித்தற்காக ஏற்றுக்கொண்டன: பான்மையின் பரிசு தானும் - நல்லூழின் தன்மைதானும், பாடுஅருந் தன்மைத்துஅன்றே - சொல்லுதற்கரிய பெருமையோடு கூடிய தன்மையதன்றோ?
கோழிகள் பான்மையால் விரதம் மேற்கொண்டன வென்க.
‘அடிகள் வாயிற் கெழுமிய மொழி‘ என்றது, மொழி மட்டும் அன்றி அம்மொழியை மொழிந்த முனிவரது பெருமையும் தோன்றுதற் பொருட்டு,
1 உயர்ந்து.
2 தன்மேற்