செந்தமிழ்க் காஞ்சி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தனியே பிறந்து தனியே வளர்ந்தது ---------- மொழி.
தனியே பிறந்து தனியே வளர்ந்தது தமிழ் மொழி.
2. பாவாணரின் முழுப்பெயர் ---------
பாவாணரின் முழுப்பெயர் தேவநேயப் பாவாணர்.
3. செந்தமிழ்க் காஞ்சி என்பது ஒரு --------- நூல்.
செந்தமிழ்க் காஞ்சி என்பது ஒரு கவிதை நூல்.
4. ஓவியங்களில் சிறப்பானது -------- ஓவியம்.
ஓவியங்களில் சிறப்பானது தஞ்சாவூர் ஓவியம்.
5. போர்வீரர்கள் போரின் காரணமாக இறந்தால்----------- வைப்பது தமிழர் மரபு.
போர்வீரர்கள் போரின் காரணமாக இறந்தால் நடுகல் வைப்பது தமிழர் மரபு.
6. தமிழ்க் கலைகளை ஒரு காலத்தில் அழித்தது ----------
தமிழ்க் கலைகளை ஒரு காலத்தில் அழித்தது கடல்.
7. தமிழ் --------- எழுத்து வடிவத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பெற்றுவிட்டது.
தமிழ் திருந்திய எழுத்து வடிவத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பெற்றுவிட்டது.
8. தமிழ் இலக்கிய நூல்களில் சில ---------.
தமிழ் இலக்கிய நூல்களில் சில சிலப்பதிகாரம், மணிமேகலை.
9. தமிழ்ச் சபையில் -------- இருந்து தமிழ் வளர்த்தார்.
தமிழ்ச் சபையில் முருகக் கடவுள் இருந்து தமிழ் வளர்த்தார்.
10. தமிழ் மொழியின் தோற்றம் அறிஞர்களால் கணக்கிட முடியாத அளவிற்குப் -------- வாய்ந்தது.
தமிழ் மொழியின் தோற்றம் அறிஞர்களால் கணக்கிட முடியாத அளவிற்குப் பழமை வாய்ந்தது.