முகப்பு |
முல்லை |
19. மருதம் |
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
||
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
||
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
||
எல்லுறும் மௌவல் நாறும் |
||
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? |
உரை | |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
108. முல்லை |
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
||
கறவை கன்றுவயின் படர, புறவில் |
||
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
||
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
||
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |
126. முல்லை |
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் |
||
இவணும் வாரார்; எவணரோ?' என, |
||
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் |
||
தொகு முகை இலங்கு எயிறு ஆக |
||
நகுமே-தோழி!-நறுந் தண் காரே. |
உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி |
162. முல்லை |
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
||
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
||
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
||
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
||
நகுவை போலக் காட்டல் |
||
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? |
உரை | |
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |
188. முல்லை |
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
||
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
||
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
||
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
193. முல்லை |
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன |
||
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, |
||
தட்டைப் பறையின், கறங்கும் நாடன் |
||
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் |
||
மணந்தனன்மன் எம் தோளே; |
||
இன்றும், முல்லை முகை நாறும்மே. |
உரை | |
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார் |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
221. முல்லை |
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
||
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
||
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
||
ஆடுடை இடைமகன் சென்னிச் |
||
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. |
உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன் |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. |
உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |
323. முல்லை |
எல்லாம் எவனோ? பதடி வைகல்- |
||
பாணர் படுமலை பண்ணிய எழாலின் |
||
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, |
||
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
||
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் |
||
அரிவை தோள்-அணைத் துஞ்சிக் |
||
கழிந்த நாள் இவண் வாழும் நாளே, |
உரை | |
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார் |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
||
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
||
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
||
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
||
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
||
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
||
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. |
உரை | |
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |
382. முல்லை |
தண் துளிக்கு ஏற்ற பைங் |
||
கொடி முல்லை |
||
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப் |
||
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, |
||
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, |
||
கார் இது பருவம் ஆயின், |
||
வாராரோ, நம் காதலோரே? |
உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன் |