முகப்பு |
குருகு (நாரை) |
5. நெய்தல் |
அதுகொல், தோழி! காம நோயே?- |
||
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, |
||
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், |
||
மெல்லம் புலம்பன் பிரிந்தென, |
||
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
34. மருதம் |
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
||
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
||
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
||
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
||
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
||
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
||
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. |
உரை | |
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |
103 நெய்தல் |
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
||
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
||
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
||
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
||
வாரார் போல்வர், நம் காதலர்; |
||
வாழேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |
113. மருதம் |
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச் |
||
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே: |
||
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் |
||
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம் |
||
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்; |
||
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே. |
உரை | |
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன் |
114. நெய்தல் |
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, |
||
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!- |
||
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும், |
||
ஆரல் அருந்த வயிற்ற |
||
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே, |
உரை | |
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன் |
125.நெய்தல் |
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, |
||
உளெனே வாழி-தோழி!-சாரல் |
||
தழை அணி அல்குல் மகளிருள்ளும் |
||
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் |
||
பறை வலம் தப்பிய பைதல் நாரை |
||
திரை தோய் வாங்கு சினை இருக்கும் |
||
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே, |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன். |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. |
உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. |
உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |
163.நெய்தல் |
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
||
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
||
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
||
வெள் வீத் தாழை திரை அலை |
||
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? |
உரை | |
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |
166. நெய்தல் |
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
||
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
||
ஊரோ நன்றுமன், மரந்தை; |
||
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
228. நெய்தல் |
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
||
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
||
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
||
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
||
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
||
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. |
உரை | |
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
236. நெய்தல் |
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ |
||
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- |
||
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை |
||
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை |
||
வம்ப நாரை சேக்கும் |
||
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார். |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. |
உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
325. நெய்தல் |
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம் |
||
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று |
||
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ! |
||
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
||
கருங் கால் வெண் குருகு மேயும் |
||
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. |
உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார் |
349. நெய்தல் |
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
||
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
||
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
||
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; |
||
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
||
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், |
||
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? |
உரை | |
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |
381. நெய்தல் |
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
||
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
||
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
||
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
||
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
||
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
||
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது. |