|
29 தவத்திறம் பூண்டு தருமம்
கேட்ட காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை, காஞ்சிமாநகர்க்கண் சென்ற
பின்னர் அறவண அடிகளும் தாயரும் செல்ல
அவரைக்கண்டு
இறைஞ்சித் தருமம்கேட்ட பாட்டு
]
|
|
|
|
|
|
இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
|
|
|
அறம்திகழ் நாவின் அறவணன் உரைப்போன்:
|
|
|
வென்வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
|
|
|
தன்மகள் பீலி வளைதான் பயந்த
|
|
5
|
புனிற்றுஇளங் குழவியைத் தீவகம் பொருந்தித
|
|
|
|
|
|
தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்
|
|
|
வணங்கிக் கொண்டுஅவன் வங்கம் ஏற்றிக்
|
|
|
கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து
|
|
|
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும
|
|
10
|
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது
|
|
|
|
|
|
அரைசற்கு உணர்த்தலும் அவன்அயர் வுற்று
|
|
|
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
|
|
|
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
|
உரை
|
|
நின்உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த
|
|
15
|
மன்உயிர் முதல்வன் மகர வேலையுள்
|
|
|
|
|
|
முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப்
|
|
|
பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்
|
|
|
துன்னியது என்னத் தொடுகடல் உழந்துழி
|
உரை
|
|
எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா
|
|
20
|
வழுவாச் சீலம் வாய்மையில் கொண்ட
|
|
|
|
|
|
பான்மையில் தனாது பாண்டு கம்பளம்
|
|
|
தான்நடுக்கு உற்ற தன்மை நோக்கி
|
|
|
ஆதி முதல்வன் போதி மூலத்து
|
|
|
நாதன் ஆவோன் நளிநீர்ப் பரப்பின்
|
|
25
|
எவ்வம்உற் றான்தனது எவ்வம் தீர்எனப்
|
|
|
|
|
|
பவ்வத்து எடுத்துப் பாரமிதை முற்றவும்
|
|
|
அறஅரசு ஆளவும் அறவாழி உருட்டவும்
|
|
|
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
|
|
|
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
|
உரை
|
30
|
அந்த உதவிக்கு ஆங்குஅவள் பெயரைத்
|
|
|
|
|
|
தந்தைஇட் டனன்நினைத் தையல்நின் துறவியும்
|
|
|
அன்றே கனவின் நனவுஎன அறைந்த
|
|
|
|
|
|
என்பவட்கு ஒப்ப அவன்இடு சாபத்து
|
|
35
|
நகர்கடல் கொள்ளநின் தாயரும் யானும்
|
|
|
|
|
|
பகரும்நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம்
|
|
|
என்றலும் அறவணன் தாள்இணை இறைஞ்சிப்
|
உரை
|
|
பொன்திகழ் புத்த பீடிகை போற்றும்
|
|
|
தீவ திலகையும் இத்திறம் செப்பினள்
|
|
40
|
ஆதலின் அன்ன அணிநகர் மருங்கே
|
|
|
|
|
|
வேற்றுஉருக் கொண்டு வெவ்வேறு உரைக்கும்
|
|
|
நூல்துறைச் சமய நுண்பொருள் கேட்டே
|
|
|
அவ்வுரு என்ன ஐவகைச் சமயமும்
|
|
|
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
|
|
45
|
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன,
|
உரை
|
|
|
|
|
நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள்நீ:
|
|
|
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
|
|
|
ஏதம்இல் பிரத்தியம் கருத்துஅளவு என்னச்
|
உரை
|
|
சுட்டுணர் வைப்பிரத் தியக்கம் எனச்சொலி
|
|
50
|
விட்டனர் நாம சாதிகுணக் கிரியைகள்
|
|
|
|
|
|
மற்றவை அனுமா னத்தும்அடை யும்எனக
|
உரை
|
|
காரிய காரண சாமா னியக்கருத்து
|
|
|
ஓரின் பிழைக்கையும் உண்டுபிழை யாதது
|
|
|
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
|
|
55
|
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
|
|
|
|
|
|
ஆன முறைமையின் அனுமான மாம்பிற
|
உரை
|
|
பக்கம் ஏதுத் திட்டாந்தம் உபநயம்
|
|
|
நிகமனம் என்ன ஐந்துஉள அவற்றில்
|
|
|
பக்கம் இம்மலை நெருப்புஉடைத்து என்றல்
|
|
60
|
புகைஉடைத் தாதலால் எனல்பொருந்து ஏது
|
|
|
|
|
|
வகைஅமை அடுக்களை போல்திட் டாந்தம
|
|
|
உபநயம் மலையும் புகைஉடைத்து என்றல்
|
|
|
நிகமனம் புகைஉடைத் தேநெருப்பு உடைத்துஎனல்
|
உரை
|
|
நெருப்புடைத் தல்லாது யாதொன்று அதுபுகைப
|
|
65
|
பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
|
|
|
|
|
|
மேய விபக்கத்து மீட்சி மொழியாய்
|
|
|
வைதன் மியதிட் டாந்தம் ஆகும்
|
உரை
|
|
தூய காரிய ஏதுச் சுபாவம்
|
|
|
ஆயின் சத்தம் அநித்தம் என்றல
|
|
70
|
பக்கம் பண்ணப் படுத லால்எனல்
|
|
|
|
|
|
பக்க தன்ம வசனம் ஆகும்
|
உரை
|
|
யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது
|
|
|
அநித்தம் கடம்போல் என்றல் சபக்கத்
|
|
|
தொடர்ச்சி யாதொன்று அநித்தம்அல்
லாதது
|
|
75
|
பண்ணப் படாதது ஆகாசம் போல்எனல
|
|
|
|
|
|
விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி
என்க
|
உரை
|
|
அநன்னு வயத்தில் பிரமாணம் ஆவது
|
|
|
இவ்வெள் ளிடைக்கண் குடம்இலை என்றல்
|
|
|
செவ்விய பக்கம் தோன்றாமை யில்எனல்
|
|
80
|
பக்க தன்ம வசனம் ஆகும்
|
|
|
|
|
இன்மையின் கண்டிலம் முயல்கோடு என்றல
|
|
|
அந்நெறிச் சபக்கம் யாதொன்று உண்டுஅது
|
|
|
தோற்றரவு அடுக்கும் கைந்நெல்லி போல்எனல்
|
|
|
ஏற்ற விபக்கத்து உரைஎனல் ஆகும்
|
உரை
|
85
|
இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன
|
|
|
|
|
|
என்னைகா ரியம்புகை சாதித்தது என்னின்
|
|
|
புகைஉள இடத்து நெருப்புஉண்டு என்னும்
|
|
|
அன்னுவயத் தாலும், நெருப்புஇலா இடத்துப்
|
|
|
புகையில்லை என்னும் வெதிரேகத் தாலும்
|
|
90
|
புகைஇ நெருப்பைச் சாதித்தது என்னின்
|
உரை
|
|
|
|
|
நேரிய புகையில் நிகழ்ந்துஉண் டான
|
|
|
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
|
|
|
வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின்
|
|
|
மேல்நோக் கிக்கறுத்து இருப்பபகைத்து
இருப்ப
|
|
95
|
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
|
உரை
|
|
|
|
|
அன்னு வயம்சா திக்கின் முன்னும்
|
|
|
கழுதை யையும் கணிகை யையும்
|
|
|
தம்மில் ஒருகா லத்துஓர் இடத்தே
|
|
|
அன்னு வயம்கண் டான்பிற் காலத்துக்
|
|
100
|
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை
|
|
|
|
|
|
அனுமிக்க வேண்டும் அதுகூ டாநெருப்பு
|
உரை
|
|
இலாஇடத் துப்புகை இலைஎன நேர்அத்
|
|
|
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின
|
|
|
நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரின்
|
|
105
|
நரிவாலும் இலையாகக் காணப் பட்ட
|
|
|
|
|
|
அதனையே கொண்டு பிறிதுஓர் இடத்து
|
|
|
நரிவாலி னால்நாய் வாலைஅனு மித்தல
|
|
|
அரிதாம் அதனால் அதுவும்ஆ காது.
|
உரை
|
|
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
|
|
110
|
திட்டாந் தத்தி லேசென்று அடங்கும்
|
உரை
|
|
|
|
|
பக்கம் ஏதுத் திட்டாந் தங்கள்
|
|
|
ஒக்க நல்லவும் தீயவும் உளஅதில
|
உரை
|
|
வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்
|
|
|
வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்
|
|
115
|
பிறிதின் வேறாம் வேறுபாட் டினையும்
|
|
|
|
|
|
தன்கண் சார்த்திய நயம்தருதல் உடையது
|
|
|
நன்குஎன் பக்கம்என நாட்டுக அதுதான்
|
|
|
சத்தம் அநித்தம் நித்தம்என்று ஒன்றைப்
|
|
|
பற்றி நாட்டப் படுவது அதில்தன்மி
|
|
120
|
சத்தம் சாத்திய தன்ம மாவது
|
|
|
|
|
|
நித்தா நித்தம் நிகழும்நல் ஏது
|
உரை
|
|
மூன்றாய்த் தோன்றும் ஒழிந்த பக்கத்து
|
|
|
ஊன்றி நிற்றலும் சபக்கத்துஉண் டாதலும்
|
|
|
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
|
உரை
|
125
|
சாதிக் கின்பொருள் தன்னால் பக்கத்து
|
|
|
|
|
|
ஓதிய பொதுவகை ஒன்றி இருத்தல
|
|
|
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின
|
|
|
ஒத்த அநித்தம் கடாதி போல்எனல
|
|
|
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
|
|
130
|
அநித்தம்அல் லாதது பண்ணப் படாதது
|
|
|
|
|
|
ஆஅ காசம் போல்என்று ஆகும்.
|
|
|
பண்ணப் படுதலும் செயலிடைத் தோன்றலும்
|
|
|
நண்ணிய பக்கம் சபக்கத் திலுமாய்
|
|
|
விபக்கத்து இன்றி அநித்தத் தினுக்கு
|
|
135
|
மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க.
|
உரை
|
|
|
|
|
ஏதம்இல் திட்டாந் தம்இரு வகைய
|
|
|
சாதன் மியம்வை தன்மி யம்எனச்
|
|
|
சாதன் மியம்எனப் படுவது தானே
|
|
|
அநித்தம் கடாதி அன்னுவயத்து என்கை
|
|
140
|
வைதன் மியதிட் டாந்தம் சாத்தியம்
|
|
|
|
|
|
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
|
|
|
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
|
உரை
|
|
தீய பக்கமும் தீய ஏதுவும்
|
|
|
தீய எடுத்துக் காட்டும் ஆவன
|
|
145
|
பக்கப் போலியும் ஏதுப் போலியும
|
|
|
|
|
|
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
|
|
|
பக்கப் போலி ஒன்பது வகைப்படும்
|
|
|
பிரத்தி யக்க விருத்தம் அனுமான
|
|
|
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
|
|
150
|
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர
|
|
|
|
|
|
சித்த விசேடணம் அப்பிர சித்த
|
|
|
விசேடியம் அப்பிர சித்த உபயம்
|
|
|
அப்பிர சித்த சம்பந் தம்என
|
உரை
|
|
எண்ணிய இவற்றுள், பிரத்தியக்க விருத்தம்
|
|
155
|
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
|
|
|
|
|
|
சத்தம் செவிக்குப் புலன்அன்று என்றல
|
உரை
|
|
மற்றுஅனு மான விருத்தம் ஆவது
|
|
|
கருத்தள வையைமா றாகக் கூறல்
|
|
|
அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்
|
உரை
|
160
|
சுவசன விருத்தம்தன் சொல்மாறி இயம்பல்
|
|
|
|
|
|
என்தாய் மலடி என்றே இயம்பல்
|
உரை
|
|
உலக விருத்தம் உலகின்மாறு ஆம்உரை
|
|
|
இலகுமதி சந்திரன் அல்ல என்றல்,
|
உரை
|
|
ஆகம விருத்தம்தன் நூல்மாறு அறைதல்
|
|
165
|
அநித்த வாதியாய் உள்ளவை சேடிகன
|
|
|
|
|
|
அநித்தி யத்தைநித் தியம்என நுவறல
|
உரை
|
|
அப்பிர சித்த விசேடணம் ஆவது
|
|
|
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
|
|
|
பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக்
|
|
170
|
குறித்துச் சத்தம் விநாசி என்றால்
|
|
|
|
|
|
அவன்அவி நாச வாதி ஆதலின்
|
|
|
சாத்திய விநாசம்அப் பிரசித்தம் ஆகும்.
|
உரை
|
|
அப்பிர சித்த விசேடியம் ஆவது
|
|
|
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
|
|
175
|
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
|
|
|
|
|
|
பௌத்தனைக் குறித்துஆன் மாச்சை தனியவான்
|
|
|
என்றால் அவன்அ நான்ம வாதி
|
|
|
ஆதலில் தன்மி அப்பிர சித்தம்
|
உரை
|
|
அப்பிர சித்த உபயம் ஆவது
|
|
180
|
மாறுஆ னோற்குத் தன்மி சாத்தியம்
|
|
|
|
|
|
ஏறாது அப்பிர சித்தமாய் இருத்தல்
|
|
|
பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்
|
|
|
சுகம்முத லியதொகைப் பொருட்குக் காரணம்
|
|
|
ஆன்மா என்றால் சுகமும்ஆன் மாவும்
|
|
185
|
தாம்இசை யாமையில் அப்பிரசித் தோபயம்
|
உரை
|
|
|
|
அப்பிர சித்த சம்பந்தம் ஆவது
|
|
|
எதிரிக்கு இசைந்த பொருள்சா தித்தல
|
|
|
மாறாம் பௌத்தற்குச் சத்த அநித்தம்
|
|
|
கூறில் அவன்ன் கொள்கைஅஃது ஆகலில்
|
|
190
|
வேறுசா திக்க வேண்டா தாகும்.
|
உரை
|
|
|
|
|
ஏதுப் போலி ஓதின்மூன்று ஆகும்
|
|
|
அசித்தம் அநைகாந் திகம்விருத் தம்என
|
உரை
|
|
உபயா சித்தம் அன்னியதரா சித்தம்
|
|
|
சித்தா சித்தம் ஆசிரயா சித்தம்
|
|
195
|
எனநான்கு அசித்தம் உபயா சித்தம்
|
உரை
|
|
|
|
|
சாதன ஏது இருவர்க்கும் இன்றிச்
|
|
|
சத்தம் அநித்தம் கண்புலத்து என்றல
|
உரை
|
|
அன்னியதரா சித்தம் மாறாய் நின்றாற்கு
|
|
|
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல
|
|
200
|
சத்தம் செயல்உறல் அநித்தம் என்னின
|
|
|
|
|
|
சித்த வெளிப்பாடு அல்லது செயல்உறல
|
|
|
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
|
உரை
|
|
சித்தா சித்தம் ஆவது
|
|
|
ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல
|
|
205
|
ஆவி பனிஎன ஐயுறா நின்றே
|
|
|
|
|
|
தூய புகைநெருப்பு உண்டுஎனத் துணிதல்
|
உரை
|
|
ஆசிரயா சித்தம் மாறா னவனுக்கு
|
|
|
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
|
|
|
ஆகாசம், சத்த குணத்தால் பொருளாம்
என்னின்
|
|
210
|
ஆகா சம்பொருள் அல்லஎன் பாற்குத்
|
|
|
|
|
|
தன்மி அசித்தம் அநைகாந் திகமும்
|
உரை
|
|
சாதா ரணம்அசா தாரணம் சபக்கைக
|
|
|
தேச விருத்தி விபக்க வியாபி
|
|
|
விபக்கைக தேச விருத்தி சபக்க
|
|
215
|
வியாபி உபயைக தேச விருத்தி
|
|
|
|
|
|
விருத்த வியபி சாரிஎன்று ஆறு
|
உரை
|
|
சாதாரணம் சபக்க விபக்கத் துக்கும்
|
|
|
ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்
|
|
|
அநித்தம் அறியப் படுதலின் என்றால்
|
|
220
|
அறியப் படுதல்நித் தாநித்தம் இரண்டுக்கும்
|
|
|
|
|
|
செறியும் கடம்போல் அநித்தத்து அறிவோ
|
|
|
ஆகா சம்போல நித்தத்து அறிவோ
|
|
|
என்னல் அசாதா ரணமா வதுதான்
|
உரை
|
|
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
|
|
225
|
சபக்க விபக்கம் தம்மில்இன் றாதல்
|
|
|
|
|
|
சத்தம் நித்தம் கேட்கப் படுதலின்
|
|
|
என்னில் கேட்கப் படல்எனும் ஏதுப்
|
|
|
பக்கத் துள்ள தாயி அல்லது
|
|
|
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
|
|
230
|
சங்கயம் எய்தி அநேகாந் திகமாம்
|
உரை
|
|
|
|
|
சபக்கைக தேச விருத்தி விபக்க
|
|
|
வியாபி யாவது ஏதுச் சபக்கத்து
|
|
|
ஓரிடத்து எய்தி விபக்கத்து எங்கும்
|
|
|
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்
|
|
235
|
தோன்றா தாகும் அநித்தம் ஆகலின்
|
|
|
|
|
|
என்றால் அநித்தம் என்ற ஏதுச்
|
|
|
செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்கம்
|
|
|
மின்னினும் ஆகா சத்தினும் மின்னின்
|
|
|
நிகழ்ந்துஆ காசத்தில் காணாது ஆகலின்
|
|
240
|
அநித்தம் கடாதியின் ஒத்தலில் கடம்போல்
|
|
|
|
|
|
அழிந்து செயலில் தோன்றுமோ மின்போல்
|
|
|
அழிந்து செயலில் தோன்றா தோஎனல்
|
உரை
|
|
விபக்கைக தேச விருத்தி சபக்க
|
|
|
வியாபி யாவது ஏது விபக்கத்து
|
|
245
|
ஓரிடத்து உற்றுச் சபக்கத்துஒத்து இயறல்
|
|
|
|
|
|
சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம்ஆ
தலின்எனின்
|
|
|
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
|
|
|
விபக்க ஆகா யத்தினும் மின்னினும்
|
|
|
மின்னின் நிகழ்ந்துஆ காசத்துக் காணாது
|
|
250
|
சபக்கக் கடாதிகள் தம்மில்
|
|
|
|
|
|
எங்குமாய் ஏகாந்தம் அல்ல மின்போல்
|
|
|
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ
கடம்போல்
|
|
|
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோஎனல்
|
உரை
|
|
உபயைக தேச விருத்தி ஏதுச்
|
|
255
|
சபக்கத் தினும்விபக் கத்தினும் ஆகி
|
|
|
|
|
|
ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்தம்
|
|
|
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
|
|
|
அமூர்த்த ஏது நித்தத் தினுக்குச்
|
|
|
சபக்கஆ காச பரமா ணுக்களின்
|
|
260
|
ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம்
|
|
|
|
|
|
பரமா ணுவின்நிக ழாமை யானும்
|
|
|
விபக்க மான கடசுகா திகளில்
|
|
|
சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும்
|
|
|
ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று
|
|
265
|
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ
|
|
|
|
|
|
அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல்
|
உரை
|
|
விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய்
|
|
|
விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல்
|
|
|
சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின்
|
|
270
|
ஒத்த தெனினச் செயலிடைத் தோன்றற்குச்
|
|
|
|
|
|
சபக்கமாய் உள்ள கடாதி நிற்கச்
|
|
|
சத்தம் நித்தம் கேட்கப் படுதலில்
|
|
|
சத்தத் துவம்போல் எனச்சாற் றிடுதல்
|
|
|
இரண்டினும் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல
|
உரை
|
275
|
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில்
|
|
|
|
|
|
தன்மச் சொரூப விபரீத சாதனம்
|
|
|
தன்ம விசேட விபரீத சாதனம்
|
|
|
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
|
|
|
தன்மி விசேட விபரீத சாதனம்
|
|
280
|
என்ன நான்கு வகையது ஆகும்அத்
|
உரை
|
|
|
|
|
தன்மச் சொரூப விபரீத சாதனம்
|
|
|
சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து
|
|
|
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
|
|
|
பண்ணப் படுதலின் என்றால் பண்ணப்
|
|
285
|
படுவது அநித்தமா தலில்பண்ணப் பட்ட
|
|
|
|
|
|
ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட்டு
|
|
|
அநித்தம் சாதித்த லான்விப ரீதம்
|
உரை
|
|
தன்ம விசேட விபரீத சாதனம்
|
|
|
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
|
|
290
|
தன்னிடை விசேடம் கெடச்சா தித்தல்
|
|
|
|
|
|
கண்முதல் ஓர்க்கும் இந்திரி யங்கள்
|
|
|
எண்ணில் பரார்த்தம் தொக்குநிற் றலினால்
|
|
|
சயனா சனங்கள் போல என்றால்
|
|
|
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்
|
|
295
|
சயனா சனத்தின் பரார்த்தம்போல் கண்முதல்
|
|
|
|
|
|
இந்தியங் களையும் பரார்த்தத்தில்
சாதித்துச்
|
|
|
சயனா சனவா னைப்போல் ஆகிக்
|
|
|
கண்முதல் இந்தியத் துக்கும் பரனாய்ச்
|
|
|
சாதிக் கிறநிர அவயவமாய் உள்ள
|
|
300
|
ஆன்மா வைச்சா வயவ மாகச்
|
|
|
|
|
|
சாதித் துச்சாத் தியதன் மத்தின்
|
|
|
விசேடம் கெடுத்த லின்விப ரீதம்
|
உரை
|
|
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
|
|
|
தன்மி உடைய சொருபமாத் திரத்தினை
|
|
305
|
ஏதுத் தானே விபரீதப் படுத்தல்
|
|
|
|
|
|
பாவம் திரவியம் கன்மம் அன்று
|
|
|
குணமும் அன்றுஎத் திரவியம் ஆம்எக்
|
|
|
குணகன் மத்துஉண் மையின்வே றாதலால்
|
|
|
சாமா னியவிசே டம்போல் என்றால்
|
|
310
|
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்
|
|
|
|
|
|
நின்றவற் றின்இடை உண்மைவே றாதலால்
என்று
|
|
|
காட்டப் பட்ட ஏது மூன்றினுடை
|
|
|
உண்மை வேறு படுத்தும் பொதுவாம்
|
|
|
உண்மை சாத்தியத்து இல்லா மையினும்
|
|
315
|
திட்டாந் தத்தில் சாமானியம் விசேடம்
|
|
|
|
|
|
போக்கிப் பிறிதுஒன்று இல்லாமை யானும்
|
|
|
பாவம் என்று பகர்ந்ததன் மியினை
|
|
|
அபாவம் ஆக்குத லான்விப ரீதம்
|
உரை
|
|
தன்மி விசேட விபரீத சாதனம்
|
|
320
|
தன்மி விசேட அபாவம் சாதித்தல்
|
|
|
|
|
|
முன்னம் காட்டப் பட்ட ஏதுவே
|
|
|
பாவமா கின்றது கருத்தா வுடைய
|
|
|
கிரியையும் குணமும்ஆம் அதனை விபரீதம்
|
|
|
ஆக்கியது ஆதலால் தன்மி விசேடம்
|
|
325
|
கெடுத்தது, தீய எடுத்துக்காட்டு ஆவன
|
உரை
|
|
|
|
|
தாமே திட்டாந்த ஆபா சங்கள்
|
|
|
திட்டாந் தம்இரு வகைப்படும் என்றுமுன்
|
|
|
கூறப் பட்டன இங்கண் அவற்றுள்
|
உரை
|
|
சாதன் மியதிட் டாந்தஆ பாசம்
|
|
330
|
ஓதில் ஐந்து வகைஉள தாகும்
|
|
|
|
|
|
சாதன தன்ம விகலமும் சாத்திய
|
|
|
தன்ம விகலமும் உபய தன்ம
|
|
|
விகலமும் அநன்னு வயவிப ரீதான்
|
|
|
னுவயம் என்ன, வைதன் மியதிட்
|
|
335
|
டாந்த ஆபா சமும்ஐ வகைய
|
|
|
|
|
|
சாத்தி யாவி யாவி ருத்தி
|
|
|
சாத னாவி யாவி ருத்தி
|
|
|
உபயாவி யாவி ருத்திஅவ் வெதிரேகம்
|
|
|
விபரீத வெதிரேகம் என்ன, இவற்றுள்
|
உரை
|
340
|
சாதன தன்ம விகலம் ஆவது
|
|
|
|
|
|
திட்டாந் தத்தில் சாதனம் குறைவது
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
|
|
|
யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்
|
|
|
ஆதலால் காண்புற்றது பரமாணு வில்எனில்
|
|
345
|
திட்டாந்த தப்பர மாணு
|
|
|
|
|
|
நித்தத் தோடு அமூர்த்தம் ஆதலால்
|
|
|
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
|
|
|
சாதன தன்மஅமூர்த் தத்துவம் குறையும்
|
உரை
|
|
சாத்திய தன்மம் விகலம் ஆவது
|
|
350
|
காட்டப் பட்ட திட்டாந் தத்தில்
|
|
|
|
|
|
சாத்திய தன்மம் குறைவு படுதல்
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
|
|
|
யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்
|
|
|
புத்தி போஒல் என்றால்
|
|
355
|
திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
|
|
|
|
|
|
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
|
|
|
அநித்தம் ஆதலால் சாதன அமூர்த்தத்துவம்
|
|
|
நிரம்பிச் சாத்தியம் நித்தத்துவம்
குறையும்
|
உரை
|
|
உபய தன்ம விகலம் ஆவது
|
|
360
|
காட்டப் பட்ட திட்டாந் தத்திலே
|
|
|
|
|
|
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
|
|
|
அன்றியும் அதுதான் சன்னும் அசன்னும்
|
|
|
என்றுஇரு வகையாம் இவற்றுள்சன் னாஉள
|
உரை
|
|
உபய தன்ம விகலம் ஆவது
|
|
365
|
உள்ள பொருள்கள் சாத்திய சாதனம்
|
|
|
|
|
|
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
|
|
|
யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்
|
|
|
கடம்போல் எனில்திட் டாந்த மாகக்
|
|
370
|
காட்டப் பட்டகடம் தான்உண் டாகிச்
|
|
|
|
|
|
சாத்திய மாயுள நித்தம் துவமும்
|
|
|
சாதன மாயுள அமூர்த்தத்து வமும்குறையும்
|
உரை
|
|
அசன்னா உள்ள உபயதன்ம விகலம்
|
|
|
இல்லாப் பொருள்கண் சாத்திய சாதனம்
|
|
375
|
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
|
|
|
|
|
|
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
|
|
|
யாதொன்று யாதொன்று மூர்த்தம்அது அநித்தம்
|
|
|
ஆகாசம் போல்எனும் திட்டாந் தத்துச்
|
|
|
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
|
|
380
|
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்
|
|
|
|
|
|
இரண்டும் ஆகாசம் அசத்துஎன் பானுக்கு
|
|
|
அதன்கண் இன்மை யானே குறையும்
|
|
|
உண்டுஎன் பானுக்கு ஆகாசம் நித்தம்
|
|
|
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
|
உரை
|
385
|
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
|
|
|
|
|
|
தம்மின் கூட்ட மாத்திரம் சொல்லாதே
|
|
|
இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல்
|
|
|
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
|
|
|
யாதொன்று யாதொன்று கிருத்தம்அது அநித்தம்எனும்
|
|
390
|
அன்னுவயம் சொல்லாது குடத்தின் கண்ணே
|
|
|
|
|
|
கிருத்த அநித்தம் காணப் பட்ட
|
|
|
என்றால் அன்னுவயம் தெரியா தாகும்
|
உரை
|
|
விபரீதான் னுவயம் வியாபகத்
துடைய
|
|
|
அன்னுவயத் தாலே வியாப்பியம்
விதித்தல்
|
|
395
|
சத்தம்
அநித்தம் கிருத்தத் தால்எனின்
|
|
|
|
|
|
யாதொன்று யாதொன்று கிருத்தம்
அநித்தம்என
|
|
|
வியாபகத் தால்வியா பகத்தைக்
கருதாது
|
|
|
யாதொன்று யாதொன்று அநித்தம்அது
கிருத்தம்என
|
|
|
வியாபகத் தால்வியாப் பியத்தைக்
கருதுதல்
|
|
400
|
அப்படிக்
கருதின் வியாபகம் வியாப்பியத்தை
|
|
|
|
|
|
இன்றியும் நிகழ்த லின்விப ரீதமாம்.
|
உரை
|
|
வைதன்மிய திட்டாந் தத்துச்
|
|
|
சாத்தி யாவியா விருத்தி யாவது
|
|
|
சாதன தன்மம் மீண்டு
|
|
405
|
சாத்திய
தன்மம் மீளாது ஒழிதல்
|
|
|
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தத்து
என்றால்
|
|
|
யாதொன்று யாதொன்று நித்தமும்
அன்றுஅது
|
|
|
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்எனின்
|
|
|
அப்படித், திட்டாந்த மாகக்
காட்டப் பட்ட
|
|
410
|
பரமாணு
நித்தமாய் மூர்த்தம் ஆதலின்
|
|
|
|
|
|
சாதன அமூர்த்தம் மீண்டு
|
|
|
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்
|
உரை |
|
சாதனாவியா விருத்தி யாவது
|
|
|
சாத்திய தன்மம் மீண்டு
|
|
415
|
சாதன
தன்மம் மீளாது ஒழிதல்
|
|
|
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தத்து
என்றால்
| |
|
யாதொன்று யாதொன்று நித்தம்
அன்று அஃது
|
|
|
அமூர்த்தமும் அன்று கன்மம்போல்
என்றால்
|
|
|
வைதன் மியதிட் டாந்த மாகக்
|
|
420
|
காட்டப்
பட்ட கன்மம்
|
|
|
|
|
|
அமூர்த்தமாய் நின்றே அநித்தம்
ஆதலின்
|
|
|
சாத்திய மான நித்தியம் மீண்டு
|
|
|
சாதன மான அமூர்த்தம் மீளாது
|
உரை
|
|
உபயாவி யாவிருத்தி காட்டப்
பட்ட
|
|
425
|
வைதன் மியதிட் டாந்தத்தி னின்று
|
|
|
சாதன சாத்தியங்கள் மீளாமை
அன்றியும்
|
|
|
உண்மையின் உபயா வியாவி ருத்தி
|
|
|
இன்மையின் உபயா வியாவி ருத்தி
|
|
|
எனஇரு வகை உண்மையின்
|
உரை
|
430
|
உபயாவி யாவிருத்தி உள்ள பொருள்கண்
|
|
|
சாத்திய சாதனம் மீளா தபடி
|
|
|
வைதன் மியதிட் டாந்தம் காட்டல்
|
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தம்
ஆதலின்
|
|
|
என்றாற்கு யாதொன்று யாதொன்று
நித்தம்அன்று
|
|
435
|
அமூர்த்தமும் அன்றுஆ காசம்போல்
என்றால்
|
|
|
வைதன்மிய திட்டாந்த மாகக்
காட்டப்பட்ட
|
|
|
ஆகா சம்பொருள் என்பாற்கு
|
|
|
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும்
ஆதலான்
|
|
|
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
|
|
|
|
|
440
|
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில
இன்மையின்
|
உரை
|
|
உபயாவி யாவிருத்தி யாவது
|
|
|
சத்தம் அநித்தம் மூர்த்தம்
ஆதலான்
|
|
|
என்றஇடத்து யாதொன்று யாதொன்று
அநித்தம்
|
|
|
மூர்த்தமும் அன்றுஆ காசம் போல்என
|
|
|
|
|
445
|
வைதன் மியதிட் டாந்தம் காட்டில்
|
|
|
ஆகா சம்பொருள் அல்லஎன் பானுக்கு
|
|
|
ஆகாசந் தானே உண்மையின் மையினால்
|
|
|
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
|
|
|
மீட்சியும் மீளா மையும்இலை யாகும்
|
உரை
|
|
|
|
450
|
அவ்வெதி ரேகம் ஆவது சாத்தியம்
|
|
|
இல்லா விடத்துச் சாதனம் இன்மை
|
|
|
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
|
|
|
நித்தம் பண்ணப் படாமையால்
என்றால்
|
|
|
யாதொன்று யாதொன்று நித்தம்
அன்று
|
|
|
|
|
455
|
பண்ணப் படுவது அல்லா ததுவும்
|
|
|
அன்றுஎனும் இவ்வெதி ரேகம் தெரியச்
|
|
|
சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்
|
|
|
படுதலும் அநித்தமும் கண்டேம்
ஆதலான்
|
|
|
என்னின் வெதிரே கம்தெரி யாது
|
உரை
|
|
|
|
460
|
விபரீத வெதிரேகம் ஆவது
|
|
|
பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல்
|
|
|
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
|
|
|
என்றால் என்று நின்ற இடத்து
|
|
|
யாதோர் இடத்து நித்தமும் இல்லைஅவ்
|
|
|
|
|
465
|
விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
|
|
|
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லைஅவ்
|
|
|
விடத்து நித்தமும் இல்லை என்றால்
|
|
|
வெதிரேகம் மாறு கொள்ளும் எனக்கொள்க
|
உரை
|
|
நாட்டிய இப்படித் தீயசா தனத்தால்
|
|
|
|
|
470
|
காட்டும் அனுமான ஆபா சத்தின்
|
|
|
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
|
|
|
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்துஎன்.
|
உரை
|
|
|
|
|
தவத்திறம்
பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று.
|
|
|