தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

வேணுகோபால சுவாமி

ஊர் :

அம்பாசமுத்திரம் நகர்

வட்டம் :

அம்பாசமுத்திரம்

மாவட்டம் :

திருநெல்வேலி

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

வைணவம்-பெருமாள்

மூலவர் பெயர் :

வேணுகோபாலகிருஷ்ணசுவாமி

உலாப் படிமம் பெயர் :

வேணுகோபாலகிருஷ்ணசுவாமி

தாயார் / அம்மன் பெயர் :

ருக்மிணி, சத்தியபாமா

தலமரம் :

புன்னை

திருக்குளம் / ஆறு :

ஹரிஹர தீர்த்தம்

ஆகமம் :

பாஞ்சராத்திர ஆகமம்

பூசைக்காலம் :

விஸ்வரூபம், உச்சிக்காலம், சாயரட்சை, திருவிசாகம்

திருவிழாக்கள் :

வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஆடி சுவாதி, வைகுண்ட ஏகாதசி

தலவரலாறு :

முன்னொரு காலத்தில் சேரமன்னன் ஒருவன் திருமாலுக்கு கோயில் கட்ட விரும்பினான். அவனது கனவில் பெருமாள் சத்தியபாமா, ருக்மிணியோடு புல்லாங்குழல் இசைத்து வேணுகோபாலராக காட்சியளித்தார். ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புன்னைவனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். மன்னனும் அவ்வாறே கனவில் கண்ட காட்சிபடியே திருவுருவங்களை கோயிலில் அமைத்தான்.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

அம்பை காசிப நாதர் கோயில், மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி கோயில்

சுருக்கம் :

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்குங்கால் இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை. இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார். இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.16-ஆம் நூற்றாண்டு / மதுரை நாயக்கர்

கல்வெட்டு / செப்பேடு :

இல்லை

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறையில் மூலவர் வேணுகோபால சுவாமி நேபாள கண்டகி தீரத்தில் உள்ள சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலவர் ருக்மிணி, சத்தியபாமாவோடு காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் இங்கு உள்ளார். இக்கோயிலின் வடபுறம் உள்ள ஹரிஹர தீர்த்தம் என்ற குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிவன், கிருஷ்ணன் ஆகியோர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணன் புல்லாங்குழலூதி நின்றபடி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயில் திருக்கதவுகள் இரண்டிலும் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமைவிடம் :

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் நகர் வட்டம், திருநெல்வேலி-627401

தொலைபேசி :

04634-250555

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை

செல்லும் வழி :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தின் நுழைவாயிலில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

திருநெல்வேலி, தென்காசி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருநெல்வேலி, தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:44(இந்திய நேரம்)