தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு கீழக்கடம்பூர் ருத்ரபதி திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் கோயில்

ஊர் :

கீழக்கடம்பூர்

வட்டம் :

சிதம்பரம்

மாவட்டம் :

கடலூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ருத்ரபதி, ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

இந்திரன் இக்கோயிலுக்கு வந்து கோடி இலிங்கங்களை பிரதிட்டை செய்து ருத்ரகோடீஸ்வரர் என்ற இளங்கோயிலை எழுப்பி வழிபட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது. எனவே கீழக்கடம்பூர் கோயிலை இளங்கோயில் என்று அழைத்துள்ளனர்.

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

காட்டுமன்னார்குடி சிவன் கோயில், மேலக்கடம்பூர் சிவன் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில்

சுருக்கம் :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. தற்போது கூரைப்பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம் பெறவில்லை. எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும், எத்தனை தளங்கள் உடையது என்பதும் அறியக்கூடவில்லை. இக்கோயிலில் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்பவடிவமாக பெற்றுத் திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை. காலவெள்ளத்தால் அழிந்து விட்டன போலும். ஆனால் சிற்பங்கள் இருந்தமைக்கான சிறு சிறு கோட்டங்கள் கருவறை விமானச் சுவர்ப்பகுதியில் காணப்படுகின்றது. இக்கோட்டத்தின் கீழே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நாயன்மார்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கருவறையில் இலிங்கம் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. முகமண்டபத்தில் நந்தி உள்ளது. மகாமண்டபம் இருந்திருக்க வேண்டும். அவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலைப் பொறுத்தவரை தேவகோட்டங்களில் மாதொரு பாகன் (அர்த்தநாரி), தென்முகக் கடவுள், இலிங்க புராண தேவர், சந்தியா நிருத்த தேவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. நாயன்மார்களின் வரலாறுகள் சிற்பவடிவமாக பெற்றுத் திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். காரைக்கால் அம்மையார் தலைகீழாகக் கயிலைக்குச் செல்லும் சிற்பமும், கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேசுவரர் சிற்பமும், தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர்

கல்வெட்டு / செப்பேடு :

கடம்பூர் என்ற ஊர் கல்வெட்டில் “உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்“ என வழங்கப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஸ்ரீருத்ரபதி கோயில் என வழங்கப்படுகிறது. இக்கோயில் தாங்குதளத்தில் கி.பி.12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் நாயன்மார் பெயர்களுடன் இறை உருவங்களின் பெயர்களும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

இக்கோயிலைப் பொறுத்தவரை தேவகோட்டங்களில் மாதொரு பாகன் (அர்த்தநாரி), தென்முகக் கடவுள், இலிங்க புராண தேவர், சந்தியா நிருத்த தேவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. நாயன்மார்களின் வரலாறுகள் சிற்பவடிவமாக பெற்றுத் திகழும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். காரைக்கால் அம்மையார் தலைகீழாகக் கயிலைக்குச் செல்லும் சிற்பமும், கண்ணப்ப நாயனார் சிற்பமும், சண்டிகேசுவரர் சிற்பமும், தாடகை என்ற பெண்ணடியார் சிவனை வழிபடும் சிற்பமும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. தற்போது கூரைப்பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம் பெறவில்லை. எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும், எத்தனை தளங்கள் உடையது என்பதும் அறியக்கூடவில்லை. இக்கோயிலில் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்பவடிவமாக பெற்றுத் திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை. காலவெள்ளத்தால் அழிந்து விட்டன போலும். ஆனால் சிற்பங்கள் இருந்தமைக்கான சிறு சிறு கோட்டங்கள் கருவறை விமானச் சுவர்ப்பகுதியில் காணப்படுகின்றது. இக்கோட்டத்தின் கீழே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நாயன்மார்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கருவறையில் இலிங்கம் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. முகமண்டபத்தில் நந்தி உள்ளது. மகாமண்டபம் இருந்திருக்க வேண்டும். அவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன.

அமைவிடம் :

கீழக்கடம்பூர், சிதம்பரம் வட்டம்-608 304, கடலூர்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் காட்டுமன்னார் குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி வழியாக செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

காட்டுமன்னார்குடி, சிதம்பரம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

சிதம்பரம், கடலூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:37(இந்திய நேரம்)