Primary tabs
-
பாடம் - 2
A03132 13ஆம் நூற்றாண்டின் அரசியல் நிலை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இப்பாடம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் மிகவும் மேலோங்கி இருந்த பிற்காலப் பாண்டியரின் ஆட்சியில் நடந்தவை பற்றி விளக்குகிறது.
பிற்காலப் பாண்டியர் காலத்தில் சமுதாய நிலை, பொருளாதார நிலை, கலை வளர்ச்சி, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- 13ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியல் நிலையைப் பற்றி அறியலாம்.
- தமிழகத்தில் பாண்டியரின் ஆட்சி நன்கு அமைந்திருந்தது என்பது பற்றித் தெளிவான விளக்கம் பெறலாம்.
- படை, வரி, நீதி போன்றவை எவ்வாறு அமையப்பெற்றிருந்தன என்பதை அறியலாம்.
- சமுதாய நிலை சாதிப் பாகுபாடோடு அமைந்திருந்தது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
- பெண்களும் ஆண்களும் சரிசமமாக இருந்தனர் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
- பொருளாதார நிலை உயர்ந்த நிலையில் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- சிற்பக்கலை, இசைக்கலை போன்ற கலைகள் சிறந்து விளங்கியதை அறிந்து கொள்ளலாம்.