தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏழாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு

  • பாடம் - 2

    A04122 ஏழாம் நூற்றாண்டு

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    ஏழாம் நூற்றாண்டின் அரசியல், சமூகம், சமயம் ஆகியவற்றின் சூழல் எவ்வாறிருந்தது என்பதைக் குறிப்பிடுகிறது.

    இத்தகைய சூழல்களில் படைக்கப்பட்ட படைப்புக்களைப் பற்றிக் கூறுகிறது. குறிப்பாக, அக்காலத்தில் வெளிவந்த சமண இலக்கியங்கள் பற்றியும், சைவ இலக்கியங்கள் பற்றியும், வைணவ இலக்கியங்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

    மேலும் இதிகாசங்கள், எந்தச் சமயச் சார்புமில்லாத தனிநூல்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்களின் பின்புலங்கள் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.

    அக்காலக் கட்டத்தில் வெளியான சமண இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

    ஒன்று முதல் ஆறு வரையுள்ள சைவ சமயத் திருமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.

    வைணவ இலக்கியங்கள், இதிகாசங்கள் எவை எவை வெளிவந்தன என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 19:19:52(இந்திய நேரம்)