Primary tabs
-
பாடம் - 2C01222 ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும்இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
ஒளவையாரைப் பற்றிய சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் உள்ள அறநூல்களுக்குப் பிறகு வந்த அறநூல்களில் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் கூறும் அறக்கருத்துகளை இப்பாடம் தெரிவிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
ஒளவையாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
ஒளவையார் தமது சொல்லாற்றலால் பாடிய பாடல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
-
கல்வியின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.
-
ஒழுக்க வாழ்க்கையின் மேம்பாட்டை அறிந்து கொள்ளலாம்.
-
ஈகைப் பண்பின் பெருமைகளை உணரலாம். போரால் மனித சமுதாயம் அடையும் இன்னல்களை அறிந்து கொள்ளலாம்.
-
முயற்சியே வெற்றிக்கு அடிப்படை என்னும் அறிவைப் பெற முடியும்.
-
உழவுத் தொழிலின் உயர்வைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
-
இல்வாழ்க்கையின் பயன்களில் விருந்தோம்பலும் ஒன்று என்பதை அறியலாம்.
-