Primary tabs
-
பாடம் - 3
D01123 ஐங்குறுநூறு - 3இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் ஐங்குறுநூற்றின் இரு கைகோள்களை அவற்றின் உட்பிரிவுகளோடு விளக்குகிறது. கைகோள் என்பது ஒழுக்கம் என்பதையும், அது களவு, கற்பு என இருவகைப்படும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தைப் படித்து முடித்ததும் நீங்கள் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்.
-
அகத்திணை களவு, கற்பு என்னும் இரு கைகோளில் அடங்கும் என்பதை அறியலாம்.
-
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கில் களவு தொடங்குவதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
களவில் பாங்கியிற் கூட்டமே மிகுந்த பங்கு வகிப்பதை அறியலாம்.
-
கற்பு வாழ்க்கையில் இல்லறச் சிறப்பைப் பற்றி அறியலாம்.
-
கற்பின் உட்பிரிவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்
-