தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.4

  • 2.4 தொகுப்புரை

    கொடிது கொடிது வறுமை கொடிது. இக்கொடிய வறுமை கலைத்திறம் வாய்ந்த பாணர் கூட்டத்தை வாட்டுகிறது. இக் கூட்டத்தார் வழிநடைப் பயணமாகச் சென்ற பாலை நிலத்துக் கொடுமையும் அவர்கள் உற்ற துயரமும் சிறுபாணாற்றுப்படையில் காட்டப்படும் திறம் சிறப்பானது. மென்மைத் தன்மை மிக்க விறலியரின் அழகு நலனைப் புலவர் நயம்பட உரைப்பதும் உணர்ந்து இன்புறத்தக்கதாகும்.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    விறலியர் யாருடைய கூட்டத்தினைச் சார்ந்தவர்கள்?

    2.

    விறலியர் பற்றிய வருணனை சிறுபாணாற்றுப்படையில் எம்முறையில் அமைந்துள்ளது?

    3.

    பாலை நிலத்துக்கு உரிய பண் எது?

    4.

    மயில்கள் மேகம் என்று எதை நினைத்தன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 10:12:42(இந்திய நேரம்)