Primary tabs
2.4 தொகுப்புரை
கொடிது கொடிது வறுமை கொடிது. இக்கொடிய வறுமை கலைத்திறம் வாய்ந்த பாணர் கூட்டத்தை வாட்டுகிறது. இக் கூட்டத்தார் வழிநடைப் பயணமாகச் சென்ற பாலை நிலத்துக் கொடுமையும் அவர்கள் உற்ற துயரமும் சிறுபாணாற்றுப்படையில் காட்டப்படும் திறம் சிறப்பானது. மென்மைத் தன்மை மிக்க விறலியரின் அழகு நலனைப் புலவர் நயம்பட உரைப்பதும் உணர்ந்து இன்புறத்தக்கதாகும்.