Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1. புறநானூறு என்னும் நூல் பற்றிய விவரங்களைத் தருக.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு தொகை நூல் புறநானூறு. பண்டைத் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பைப் புறநானூறு நன்கு புலப்படுத்துகின்றது. கல்வி, புலமை, அஞ்சாமை, நடுவுநிலைமை ஆகியன தலைசிறந்து விளங்கிய ஒரு காலத்தைக் காட்டும் பெருமையுடையது புறநானூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழக வரலாற்றை எழுதுவதற்குப் புறநானூறே பெரிய ஆதார நூலாகும். பல அரிய பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வு நெறிகளையும் புறநானூறு வழி அறியலாம்.