Primary tabs
-
5.9 தொகுப்புரை
ஒழிபியலின் பிற்பகுதிச் செய்திகளை உள்ளடக்கி அமைந்த இப்பாடத்தினால் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.
அகப்பாட்டின் பொருள், உவமை, இறைச்சி என்னும் இரண்டு நிலைகளில் அமைகின்றது.
உள்ளுறை, வெளிப்படை என்னும் இரண்டு கூறுபாடுகளை உடையது உவமை.
உள்ளுறை உவமையைப் போலவே இறைச்சியும் கருப்பொருள் அடிப்படையில் பிறந்தாலும் நுட்ப வேறுபாடுடையது.
கைக்கிளையும், பெருந்திணையும் அகப்பொருளுக்கு உரியவை, அகப்பொருளுக்குப் புறத்தே அமைபவை என்னும் இரண்டு நிலைகளை உடையன.
அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இருநிலைப் பட்டவனாக அமைகிறான்.
அகப்பாடல்களில் முதல், கரு, உரி முதலான பொருள்கள் மயங்குவது வழு அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.