Primary tabs
-
பாடம் - 1
D03111 யாப்பு இலக்கணம் - பொது அறிமுகம்யாப்பிலக்கணம் என்பது எதைப் பற்றியது என விளக்குகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே யாப்புக் குறித்த சிந்தனை இருந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறது. தமிழில் தோன்றிய யாப்பு நூல்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டுகிறது. பிற யாப்பு நூல்களை அறிமுகப்படுத்துகிறது. யாப்பருங்கலக் காரிகை குறித்துச் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடித்ததும் நீங்கள் கீழ்க்காணும் திறன் மற்றும் பயன்களைப் பெறலாம் :
-
யாப்பு என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளலாம்.
-
தொல்காப்பியம் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகளின் பெயர்களை அறியலாம்.
-
தமிழில் தோன்றிய யாப்பு நூல்களை அறிந்து கொள்ளலாம்.
-
யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல் பற்றிய செய்திகளை உணரலாம்.
-