Primary tabs
- பாடம் - 6இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
அம்பையைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் கூறுகிறது. அவரது படைப்புகளுக்குரிய களம் பற்றிக் கூறுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறுள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?பெண் எழுத்தாளர் அம்பையின் பெண்ணியப் பார்வையைத் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் அவல நிலையில் அவர் கொண்ட அக்கறையை உணர்ந்து கொள்ளலாம்.
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு சிறகொடிந்த பறவைகளாக வாழ்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.