Primary tabs
1.3 பிற திராவிட மொழிகளில் நாடகத் தோற்றம்
தென் திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. இலக்கிய இலக்கணங்களில் தமிழ்மொழிக்கு அடுத்த நிலையில் வளமுடையவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள். இந்த மூன்று மொழிகளிலும் நாடகங்களின் நிலைகளைப் பற்றி அறியலாம்.ஆந்திரத்தில் இசைப்பாட்டு நாடகமாகிய வீதி நாடகம் இன்றும் சிறப்புற நடைபெற்று வருகிறது. அவ்வீதி நாடகமே தெலுங்கு மொழியின் முதல் நாடக வடிவமாகவும் விளங்குகிறது.
புதுவகை நாடகம் என்னும் அமைப்பில் சேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ்சீசர் நாடகத்தின் மொழிபெயர்ப்பு 1876 ஆம் ஆண்டு வெளிவந்தது. மொழி பெயர்ப்பாளர் வாவிலாலா வாசுதேவ சாஸ்திரி என்பவர். இந்த நாடகத்துக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்புக்குப் பின் பல நாடகங்கள் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன.
விஜயநகர மன்னரான ஆனந்த கஜபதியின் ஆதரவில் பல மொழிபெயர்ப்பு நாடகங்கள் அரங்கேறின. வாசுதேவ சாஸ்திரியைத் தொடர்ந்து கொரடி இராமச் சந்திரகவி, கே.வீரேசலிங்கம், பலிஜபள்ளி லட்சுமி காந்தன் ஆகியோர் தொடக்கக்காலத் தெலுங்கு நாடகங்களை வளர்த்தனர்.