Primary tabs
- இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் அப்துல் ரகுமானின் கவிதைகளுக்குப் பொருளாய் அமைந்துள்ள உள்ளடக்கங்களை விவரிக்கிறது. அந்தக் கவிதைகளில் அமைந்துள்ள சொல்லாட்சி, உவமை முதலிய கற்பனை நயங்களை விளக்குகிறது. புதுக்கவிதையில் அப்துல் ரகுமான் புரிந்துள்ள புதுமைகளை எடுத்துரைக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
கவிஞர் அப்துல் ரகுமானைப் பற்றிய செய்திகளை அறியலாம்.
அவரது கவிதைகள் பற்றிய தகவல்கள் அறியலாம்.
அக்கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அக்கவிதைகளில் அமைந்துள்ள சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்ற கற்பனை வளங்களை அறியலாம்.
தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சியில் அப்துல் ரகுமானின் பங்கு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
தரப்பட்டுள்ள ஒரு கவிதையைக் கொண்டு, நீங்களாகவே படித்துப் புரிந்து சுவைத்து உணரும் பயிற்சியைப் பெறலாம்.