Primary tabs
பாடம்
- 4
இந்தப்
பாடம் சிறுபாணாற்றுப்படையின் 114 முதல் 202
வரை உள்ள அடிகளுக்கு உரிய
விளக்கத்தைத் தருகிறது.
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பும்,
பாணனின் வறுமையும்
செல்வ நிலையும் பற்றிக் கூறுகிறது. பாணன்
செல்லும் வழியில்
உள்ள
எயிற்பட்டினம், வேலூர், ஆமூர்
ஆகிய நகரங்கள்
பற்றிய
செய்திகளை விளக்கிக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பை அறியலாம்.
மாவிலங்கை பற்றி விளங்கிக் கொள்ளலாம்.
பாணனின் கொடிய வறுமை பற்றித் தெரிய வரும்.
பரிசு
பெற்று வறுமை நீங்கிய பாணனின் செல்வ நிலை
புலனாகும்.
எயிற்பட்டினம்,
வேலூர், ஆமூர் நகர மக்களின்
விருந்தோம்பல் திறம் தெரிய வரும்.