தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5-தொகுப்புரை

5.5 தொகுப்புரை


    அன்பு நிறை மாணவர்களே! இப்பாடச் செய்திகளில்
முக்கியமானவற்றை ஒரு சில வரிகளில் சிந்தனையில்
கொள்ளுங்கள்.

புத்தரின் பெற்றோர்
:
சுத்தோதனர் - மாயாதேவி
புத்தர் பிறந்த ஆண்டு
:
கி.மு. 563
புத்தர் பரிநிர்வாணம்
பெற்ற ஆண்டு
:
கி.மு. 483
புத்தர் காணக் கூடாதவை
:
முதியவர், நோயாளி, பிணம், துறவி
புத்தர் துறவு நெறிச்
செல்வார் என்று கூறியவர்
:
கௌந்தஞ்ஞர்
புத்தரின் மனைவி
:
யசோதை
புத்தரின் மகன்
:
இராகுலன்
  • புத்தர் தம் 29ஆம் வயதில் துறவு மேற்கொண்டார்.
  • புத்தர் தம் 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
  • பௌத்தர்கள் தொடக்கக் காலத்தில் சைத்தியங்கள்,
    பீடிகைகள் ஆகியவற்றை வழிபட்டனர்.
  • பௌத்தர்கள் புத்தரின் திருவுருவத்தையும் வழிபட்டனர்.
  • மணிமேகலை, சம்பாபதி, கந்திற்பாவை, சதுர் மகாராஜிகர்,
    சக்கன், அவலோகிதர் என்பன பௌத்தர்கள் வழிபட்ட சிறு
    தெய்வங்களுள் சில.
  • பௌத்த நெறிகள் அடங்கிய நூல் திரிபிடகம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

(1)
பௌத்த நெறிகள் யாருடைய காலத்தில் நூல் வடிவம்
பெற்றன?
(2)
பிடகம் - பொருள் தருக.
(3)
திரிபிடகங்கள் யாவை?
(4)
விநய பிடகம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
(5)
புத்தரின் சீடர்கள் இருவரைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:17:25(இந்திய நேரம்)