தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Veerachozhium


கர்னல் வெல்டனும் பிறருங் கண்டு வியக்கும்படி செய்து இளம்புகழ் ஈட்டினர்.

இவர் தென்னிந்தியாவிற் பற்பல இடங்களில் ஏற்பட்ட குழப்பங்களைத் திறம்பட அடக்கி, ஐரோப்பிய மேற்பார்வை உத்தியோகஸ்தர்களால் 'அற்புதம் விளைத்த விற்பனர்' எனப் புகழ்ந்துரைக்கப்பட்டார் ; கொலை, கொள்ளை, பொய்க்கையெழுத்து, மோசம் முதலிய சிக்கலான வழக்குகளைக் கண்டுபிடித்து, தமது நுண்ணறிவால் அவற்றில் உண்மையை நாடி அறிந்து வெளிப்படுத்தியதால் தம் மேலதிகாரிகளாலும் நீதிபதிகளாலும் மிகவும் பாராட்டப்பட்டனர். மனந்தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிருவாக சாதுரியம் ஆகிய அரும்பண்புகள் இவரிடம் விளங்கின. இவர் சட்டப் பரீட்சையில் தேறாதவராயினும், தமக்கு இயற்கையிலேயே சட்ட நூற்களை ஆராய்வதில் ஏற்பட்டிருந்த பெருவிருப்பத்தால் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞராவர்.

இவர், F.L., B.L., சட்டப் பரீட்சைகளுக்குரிய 30 நூல்களை ஆராய்ந்தெழுதிப் பதிப்பித்துள்ளார்.

1904 ஆம் ஆண்டு முதல் 1912-ஆம் ஆண்டு வரையில் இவர் சென்னை நகரக் குற்ற வர்த்தமான விசாரணை வகுப்புத் தலைவராய் அமைந்து, அரசாங்கத்திற்கு அரிய சேவை செய்தனர்.

மாட்சிமை தங்கிய வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும் சென்னைக்கு விஜயஞ் செய்த போது (1906 வருடம் ஜனவரி மாதம் 24-28 தேதி) அவர்களுக்கு மெய்காப்பாளராயிருக்கும் பொறுப்பை ஏற்று இவர் திறம்படச் செயலாற்றியதற்கு வியந்து இளவரசர் தம் திருக்கரத்தாலேயே விசேட விருதுப் பதக்கம்1 ஒன்றை இவருக்கு அணிந்து மகிழ்ந்தார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போதும் இவரே அவர்களுக்கு மெய்காப்பாளராயிருந்து அவர்கள் மெச்சும் படி செயலாற்றினர்.

1918ல் இவர் சென்னைத் தென் பாரிச நகரக் காவற்படை அதிகாரத் தலைமைப் பிரதிநிதியாய் இருந்த போது இவர் 


1. Special Medal


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:21:21(இந்திய நேரம்)